என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 நாட்களில் ரூ.19½ கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்16 Jan 2021 5:58 PM GMT (Updated: 16 Jan 2021 5:58 PM GMT)
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.19½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகையின் போது மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடக்கும்.
எனவே பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விற்பனை வருவாய் இலக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் மது வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது பானங்களை வாங்கினர். 3 மாவட்டங்களும் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 111 கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 கடைகளும் உள்ளன. 13-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் விற்பனை கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13-ந் தேதி ரூ.4 கோடியே 89 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.2 கோடியே 70 லட்சத்துக்கும், நேற்று முன்தினம் பொங்கல் அன்று வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.6 கோடியே 79 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.
மொத்தம் 2 நாட்களில் ரூ.19 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இந்தாண்டு பீர் வகைகளை விட மது வகைகள் அதிகம் விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாக மேலாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகையின் போது மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடக்கும்.
எனவே பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விற்பனை வருவாய் இலக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் மது வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது பானங்களை வாங்கினர். 3 மாவட்டங்களும் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 111 கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 கடைகளும் உள்ளன. 13-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் விற்பனை கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13-ந் தேதி ரூ.4 கோடியே 89 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.2 கோடியே 70 லட்சத்துக்கும், நேற்று முன்தினம் பொங்கல் அன்று வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.6 கோடியே 79 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.
மொத்தம் 2 நாட்களில் ரூ.19 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இந்தாண்டு பீர் வகைகளை விட மது வகைகள் அதிகம் விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாக மேலாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X