search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாகாயம், அரியூரில் கஞ்சா, மது விற்றவர்கள் கைது

    பாகாயம், அரியூரில் கஞ்சா, மது விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் நேற்று பாகாயம் மற்றும் அரியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பல்வேறு இடங்களில் சூதாட்டம், அரசு மதுபானங்களை வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேரை பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாகாயம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரவி (வயது 63) என்பவர் தனது வீட்டுக்கு பின்புறம் கஞ்சா பொட்டலங்களை புதைத்து வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×