search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஆம்பூர் அருகே டீக்கடைக்குள் மினிவேன் புகுந்து சிறுவன் உள்பட 3 பேர் பலி

    ஆம்பூர் அருகே டீ கடைக்குள் மினி வேன் புகுந்து சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் சாலையோரம் டீக்கடை உள்ளது.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இந்த டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த மினிவேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்து, அங்கிருந்த 7 பேர் மீது மோதியது.

    விபத்து ஏற்படுத்தியதும் மினி வேனில் இருந்த பாலூரை சேர்ந்த இளங்கோ என்ற டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    இந்த விபத்தில் ஏ. கஸ்பாவைச் சேர்ந்த மணி என்ற 7 வயது சிறுவன் மற்றும் பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது50) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கணேசன்(18), கோகுல் (16), ஜோசப் (55), வேண்டா (43), தினேஷ் (17) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்பூர் பி.கஸ்பாவை சேர்ந்த குமரன் மகன் தினேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் இளங்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×