என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்15 Jan 2021 4:22 AM GMT (Updated: 15 Jan 2021 4:22 AM GMT)
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, வெங்கட்ராகவன் ஆகியோர் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சிறப்பு வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கிறார்களா?, டிரைவர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் முகப்பு விளக்குகளில் எல்.இ.டி. லைட் மற்றும் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 17 வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக நுழைவு வரி செலுத்தாத கர்நாடக லாரி பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிறப்பு வாகன சோதனை வருகிற 18-ந் தேதி இரவு வரை தொடரும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X