என் மலர்
தூத்துக்குடி
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கவின் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் கடந்த 27-ந்தேதி கவினை பாளையங்கோட்டையில் வைத்து வெட்டிக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக்கொள்வதாக கவின் தந்தை சந்திரசேகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
- காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
- கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். காசி பாண்டியன் காவல் ஆய்வாளர் இல்லை, கூலிப்படை தலைவன். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை மிரட்டியது போல் 2023-ல் பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் கொலையிலும் காசிபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப்படுகிறது.
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆணவ படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள கவின் வீட்டிற்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார். அவருடன் பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
- 1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது.
- கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ,
1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம் என்று கூறினார்.
பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கும் விதமாக ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை என்று கடம்பூர் ராஜூ விமர்சித்து பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்ற பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன்.
தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் வரலாற்று பிழை என பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
- பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.
- தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்.
அன்றைக்கு பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.
பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.
தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.
தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது என்றார்.
ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
- தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து ரெயில்வே பாலம் தமிழ்நாட்டின்தான் உள்ளது.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவின் உயிர்நாடியாக ரெயில்வே துறை உள்ளது. தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து ரெயில்வே பாலம் தமிழ்நாட்டின்தான் உள்ளது.
இந்தியாவை நவீனப்படுத்தும் வேள்வி நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலம் பொறியில் துறையின் அற்புதமாக பார்க்கப்படுகிறது.
மதுரை- போடி ரெயில் பாதை மின் மயமாக்கப்பட்டதால் வந்தே பாரத்துக்கான பாதை திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாதைகள் மூலம் தென்னிந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பயன்பெறுவர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவமக்கல்லூரிகளை வழங்கி உள்ளோம்.
மீனவர்களுக்கு எந்த அரசும் செய்யாத கரிசனத்தை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன், இந்த உற்சாகத்தின் வெளிபாடாக செல்போனில் வெளிச்சம் காட்டுமாறு பிரதமர் மோடி கூறினார்.
இதைதொடர்ந்து, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் தங்கள் செல்போனில் டார்ச் அடித்து வௌிச்சத்தை காண்டித்து உற்சாகமடைந்தனர்.
- ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக கண்டிருப்பீர்கள்.
- தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வளர்ச்சியின் புதிய மையப்புள்ளியாக தமிழகத்தையும், தூத்துக்குடியையும் உருவாக்கும்.
ஆழ்கடல் பகுதியில் சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சிதம்பரம் பிளளை
வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன் ஆகியோர் சுதந்திரமான பாரதம் என்ற கனவை உருவாக்கினார்கள்.
கடந்த ஆண்டு தூத்துக்குடியின் முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக அளித்தேன்.
பாண்டிய நாட்டின் சுத்தமான முத்துக்கள் உலக பொருளாதாரத்தின் அடையாளமாக இருந்தன.
இங்கிலாந்து உடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம். புதிய ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்தில் விற்பனை ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களின் விலை குறையும்.
இங்கிலாந்து உடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக கண்டிருப்பீர்கள்.
ஆபரேசன் சிந்தூரில் இந்தியா தயாரிப்பு தளவாடங்கள் பெரும் பங்கு வகித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் எதிரிகள் பதுங்கு குழுகள் மண்ணோடு மண்ணானது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் 20 லட்சம் பணிகளை கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இன்று திறக்கப்பட்ட சாலை கட்டமைப்பு மூலம் டெல்டா மாவட்டங்கள் சென்னையுடன் இணைக்கப்படுகிறது. ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் டெல்டா மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு போடப்பட்ட புதிய சாலையால் வர்த்தகம், வேலைவாய்ப்புக்கான புதிய பாதையை திறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
- வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று கார்கில் வெற்றித்திருநாள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.
4 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு புன்னிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம் சிவனின் ஆசீர்வாதத்துடன் தமிழ்நாட்டின் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.
திருச்செந்தூர் முருகன் துணையுடன் தமிழ்நாட்டில் புதிய தொழில் அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.
அனைத்து துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு, எரிசக்தி எந்தவொரு மாநிலத்திற்கும் முதுகெலும்பு போன்றது.
தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக தன்னிறைவு பெற்ற பாரத்ததிற்காக உழைத்து வருகின்றனர். சக்திவாய்ந்த இந்தியாவிற்கு தூத்துக்குடியின் பங்களிப்பு அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, இன்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையானே வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார்.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
முன்னதாக, மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி, தூத்துக்குடி பயணம் குறித்து தமிழில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று மாலையும் நாளையும், தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.
இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும். இது குறிப்பாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.
தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, தூத்துக்குடி வந்தடைந்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையானே வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார்.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும்.
இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு நேற்று மாலை கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கூட்டுத் திருப்பலி முடிந்ததும் காலை 8.45 மணியளவில் பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
மேலும் விழாவை முன்னிட்டு துறைமுகபகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் செய்து வருகிறனர்,
மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 2 ஏ.டிஎஸ்.பி.கள் 1 ஏ.எஸ்.பி., 5 டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர்கள், 35 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






