என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வீடியோ: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. பக்தி கோஷமிட்ட ஜப்பான் பக்தர்கள்
    X

    வீடியோ: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. பக்தி கோஷமிட்ட ஜப்பான் பக்தர்கள்

    • 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.
    • நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்த சிறந்த பரிகார தலமாகாவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். திருவிழா காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருகன் மற்றும் பழனி புலிப்பாணி ஆசிரமம் கவுதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனி, ராமேஸ்வரம் உட்பட 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும் கோவிலுக்கு வெளியே வந்த ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் ஒன்று கூடி தமிழில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க முருகனை வழிபட்டு சென்றனர்.

    Next Story
    ×