என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
    • முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

    "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன்" என கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.
    • திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் தான் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை எல்லாம் முறையாக அதிகாரிகளை நியமித்து முழுமையாக தூர்வாரினோம்.

    விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளை திமுக அரசு முடக்கிவிட்டது.

    குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெற செய்யவில்லை.

    12,000 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெற்றுத்தந்தது அதிமுக அரசு.

    விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.

    திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.

    18,000 நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடிக்கி உள்ளதாக செய்தி பார்த்தேன், மழை வந்தால் வீணாகிவிடும்.

    அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து உரிய பணத்தையும் தந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.
    • 2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும்.

    திருத்துறைப்பூண்டி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை நேற்று (சனிக்கிழமை) இரவு திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    திருத்துறைப்பூண்டி நகரம் குலுங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் உள்ளது. எப்போது பார்த்தாலும் கூட்டணி..கூட்டணி.. என்று கூட்டணியை நம்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் கூடியுள்ள கூட்டமும், மக்கள் முகத்தில் உள்ள எழுச்சியை பார்க்கும்போதே அ.தி.மு.க.வுக்கு வெற்றியின் அறிகுறி தெரிகின்றது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகளை கொடுத்தோம், முதியோர் உதவித்தொகையை அதிகமாக கொடுத்தோம், விவசாய தொழிலாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு சரியான நேரத்தில் பணம் வந்து கிடைத்தது. ஆனால், இந்த தி.மு.க. ஆட்சியில், மு.க.ஸ்டாலின் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்றார். ஆனால், அந்த 100 நாள் வேலை திட்டம், தற்போது 50 நாளாக குறைந்துவிட்டது. வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை. அதன் பின்னர் நான் 100 நாள் வேலை செய்கின்ற ஏழைகளுக்கு தேவையான நிதியை விடுவியுங்கள் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். அதன் பின்னர் ரூ.2 ஆயிரத்து 995 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டது.

    மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதையும் வாங்கினால் ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் ஆகிவிடும். இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். மீண்டும் அ.தி.முக. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் தொடரும்.

    இதையெல்லாம் இங்கு இருக்கின்ற கம்யூனிஸ்டுகள் கேட்க மாட்டார்கள். மக்கள் பிரச்சனை வந்தால் முதலில் எதிர்த்து குரல் கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், இன்று தி.மு.க.வை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடுவதில்லை. 4 வருடத்தில் கம்யூனிஸ்டுகள் ஏதேனும் போராட்டம் நடத்தி உள்ளார்களா? பருத்தி விலை குறைவாக சென்றதற்கு முத்தரசன் ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்றார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கின்றனர். கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஏற்கனவே, தி.மு.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, ஆனால் நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி என்பதா?.

    இந்த நியாயத்தை கேட்காமல், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் கட்சிகள் தி.மு.க.வுக்கு மத்தளம் தட்டிக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் அச்சம் அடைந்துவிட்டன. எங்களுக்கு தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஒன்று சேர்ந்து வருகின்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரான்னு கேட்கிறார்கள். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல. அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    எங்கள் கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை போல் வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்.

    2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும். இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து இணைய உள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    ஆட்சிகாலம் முடிவடைய உள்ள நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என வீடு, வீடாக தி.மு.க.வினர் சென்று வருகின்றனர். மக்களின் பிரச்சனைகள் 45 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்கிறார்கள். 4 ஆண்டு காலமாக இந்த பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொண்ட நீங்கள் ஏன் தீர்த்து வைக்கவில்லை? சதுரங்க வேட்டை படத்தில் சொல்வதை போல ஏழை மக்களின் ஆசையை தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வர தி.மு.க.வினர் துடிக்கிறார்கள். மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்றி ஒரு குடும்பப் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டுப் போகிறான்.
    • குற்றவாளிக்கு அச்சம் இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக அரசு உங்க அரசு, அது உங்க கட்சி. அதிமுக நன்மை செய்யும் கட்சி, திமுக கொள்ளையடிக்கும் கட்சி. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைபொருள், கஞ்சா இல்லாத இடமே இல்லை.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டுப் போகிறான். குற்றவாளிக்கு அச்சம் இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. அப்பா என்று சொல்கிறார். பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? அப்பானு சொன்னால் மட்டும் போதுமா? இதுவரை அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறேன் என்கிறார், நான் பொய் சொல்கிறேனா..? உண்மைதான் பேசுகிறேன். நல்லாட்சியை நாங்கள் மீண்டும் கொடுப்போம். நன்னிலம் தொகுதியில் நிறைய திட்டம் அதிமுக ஆட்சியில் கொடுத்திருக்கிறோம். நன்னிலம் அரசு கலைக்கல்லூரி, குடவாசல் கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம், தூர் வாரும் பணிகள், நெல் சேமிப்பு கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பாலங்கள் என நிறைய கொடுத்திருக்கிறோம். உங்களுக்குதான் ஒண்ணும் தெரியாதே, பொம்மை முதல்வரே.

    நன்னிலம் உணவு பதப்படுத்தும் பூங்கா, அரசி ஆலை, புதிய ஊராட்சி ஒன்றியம், புறவழிச்சாலை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல் என நிறைய கோரிக்கைகள் கூறியிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்துகொடுப்போம்.

    மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது அதிமுக, மிரண்டு ஓடப்போவது திமுக. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
    • நெல் ஜெயராமனின் அரும்பணியை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டத்தில் பழமைவாய்ந்த ஜூபிலி மார்க்கெட் பகுதியில் ரூ.11 கோடி செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் நன்னிடம் வட்டம், வண்டாம்பாலை ஊராட்சியில் ரூ.56 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் திருவாரூர் மாவட்ட மாதிரி பள்ளி புதிதாக அமைக்கப்படும்.

    மாணவிகள் பயன்பெறும் வகையில் மன்னார்குடி நகராட்சியில் ரூ.18 கோடி செலவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும். ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும். பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    பாரம்பரிய நெல் ரகங்களை தனது வாழ்நாள் முழுவதும் பேணி பாதுகாத்த நெல் ஜெயராமனின் அரும்பணியை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும்.

    மேற்கண்ட அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ்.
    • கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பா.ஜ.க.வினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வை மீட்க முடியாதவர் தமிழ்நாட்டை மீட்க போகிறாராம்.

    * பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ்.

    * துரோகம் செய்வது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது.

    * ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.

    * தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கே துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.

    * கீழடி என்றால் கீழே படுத்து செல்வது மட்டும்தான் இ.பி.எஸ்.-க்கு தெரியும்.

    * பா.ஜ.க.வின் ஒரிஜினல் குரலாக பேச ஆரம்பித்து விட்டார் இ.பி.எஸ்.

    * பழனியாண்டவர் கல்லூரியில் புதிய கட்டிடத்தை மயக்கத்தில் போய் திறந்து வைத்தாரா இ.பி.எஸ்.

    * கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பா.ஜ.க.வினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

    * தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு எப்படி பயணம் மேற்கொள்கிறார் இ.பி.எஸ்.

    * கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது அறநிலையத்துறை சட்டத்திலேயே உள்ளது. இது தெரியாமல் எப்படி முதல்வராக இருந்தார் இ.பி.எஸ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கலைஞர் கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள்.
    • தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * வேளாண்மையும் கலையும் செழித்து வளரும் திருவாரூர் மண்ணில் கலைஞரின் கொள்கை வாரிசாக விழாவில் பங்கேற்கிறேன்.

    * திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கலைஞர் கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள்.

    * தொட்ட துறையில் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்கு பார்வையால் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர்.

    * மற்ற மாவட்டங்களில் உங்களில் ஒருவன் என பேசும் என்னை திருவாரூர் மக்கள் மட்டும் எங்களில் ஒருவன் என அழைக்கின்றனர்.

    * தம்பிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் என அண்ணா கூறுவார்.

    * அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உயரத்தில் மட்டுமல்ல அவரது செயல்பாடுகளாலும் உயர்ந்து நிற்கிறார்.

    * செய்தி சேனல் வளர்ச்சியை டிஆர்பி மதிப்பை வைத்து சொல்வது போல் தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியை டி.ஆர்.பி. ராஜாவை வைத்து சொல்லலாம்.

    * 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை நவீன முறையில் புதுப்பித்து இயங்க வைத்தவர் கலைஞர்.

    * தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும்.

    * திருவாரூரில் 2.37 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர்.

    * தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது.

    * ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

    * திருவாரூரில் சிப்காட் வளாகங்கள் அமைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    * திருவாரூரில் மட்டும் இதுவரை ரூ.143 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

    * நன்னிலம், பட்டாம்பாளையத்தில் புதிதாக மாதிரி பள்ளி அமைக்கப்படும்.

    * திருவாரூரில் பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட்டில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.

    * மன்னார்குடியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்.

    * திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமனுக்கு திருவுருவச் சிலை நிறுவப்படும்.

    * திருவாரூரில் வாய்க்கால், நீர் மதகுகள் உள்ளிட்டவை 43 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்.

    * இடையூறாக இருக்கும் மத்திய அரசையும் சமாளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். தொடர்ந்து, திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து ரோடு-ஷோவாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, ரெயில்வே மேம்பாலம் அருகில் நிறுவப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், இரவு சன்னதி தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.

    அதனைத் தொடர்ந்து, இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயத்தமானார். அப்போது திடீரென சன்னதி தெருவில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நடந்தே சென்ற முதலமைச்சர் மக்களிடம் தி.மு.க. அரசின் சாதனை எடுத்துக்கூறி, பரப்புரையில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக திடீரென முதலமைச்சர் தங்களது வீட்டிற்கு வந்ததும் செய்வதறியாத பொதுமக்கள் ஆனந்த பெருக்குடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது மக்களிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர், வீட்டில் கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர். சன்னதி தெரு முழுவதும் நடந்தே சென்று பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா இடத்திற்கு புறப்பட்டார். 

    • திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இதற்காக 9-ந்தேதி காலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்கிறார்.

    மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    அங்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.

    9-ந்தேதி இரவு திருவாரூரில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10-ந்தேதி காலை திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    • அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான-2025 ஆண்டுக்கான அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள 370 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எந்த பாடத்தில் திறன் குறைந்து இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், 8-வது மாவட்டமாக திருவாரூரில் இன்று குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து, அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநில அடைவு திறனாய்வு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பிராகரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.
    • விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

        மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராவணன் குட்டை தெருவை சேர்ந்தவர் சிவகணேஷ். கேபிள் தொழில் செய்து வருகிறார்.

    இவரது மகன் அமரேஷ் (வயது 13). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் மன்னார்குடி ருக்மணிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

    அப்போது பள்ளி மாணவன் அமரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். சிவகணேஷ் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகணேசை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான அமரேஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்ற போது விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
    • மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

    திருவாரூர்:

    பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்டுகளின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒரு கிலோ பருத்தியை ரூ.100-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து ஏஜெண்டுகளையும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதிகளில் பருத்தி செடிகள் இளம் பயிராக இருந்தபோது 2 முறை பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி முடிவடைந்துள்ள நிலையில் பருத்தி பஞ்சுகளுக்கு உரிய விலை இல்லை எனக்கூறி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் பருத்தி ஏலங்களில் கோவை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் உள்ள பஞ்சு மில் உரிமையாளர்களின் முகவர்கள் கலந்து கொள்வதில்லை. திருவாரூரை சுற்றியுள்ள இடைத்தரகர்களை வைத்தே ஏலம் விடப்படுகிறது.

    இதனை கண்டித்தும், பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. நடத்தியது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடவாசல் பகுதியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.71-க்கு விலை போனது.

    மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் துரிதமாக நடைபெறுவதில்லை. கொள்முதல் செய்யப்படும் நெல்லும் பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்படுவதில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவது மட்டும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×