என் மலர்
திருவாரூர்
- நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள்.
- அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர்.
திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
கேள்வி கேட்கிறான் என்று நினைக்கிறாதீர்கள். தீர்வை நோக்கி போவதுதான் தவெக-வின் லட்சியம். தேர்தல் அறிக்கையில் அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுப்போம். பொய்யான தேர்தல் அறிக்கைய கொடுக்கமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வோம். எது உண்மையோ அதை மட்டுமே சொல்வோம். செய்வோம்.
ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி இதுதான் த.வெ.க.வின் மிஷன்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள். அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர். இது என்ன சும்மா கூட்டமா? தொண்டர்கள் TVK TVK என கரகோஷம் எழுப்ப கோடான கோடி நன்றிகள் எனத் தெரிவித்தார்.
- உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்னு உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும்.
- மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜய் பேசியதாவது:-
இந்த மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னத் தெரியுமா?. முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வது. அதுதான் அவருடைய வேலை. மக்கள்தான் முக்கியம் என அவருக்கு புரிய வைக்க வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும். மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே. இதை நான் சொல்லல. வார பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அதான் நான் திரும்ப சொல்கிறேன்.
இவ்வாறு விஜய் பேசினார்.
- தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
- உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார்.
திருவாரூில் பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக தோளில் பச்சை துண்டு அணிந்து வந்தார்.
அதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்," திருவாரூர் தியாகராஜன் கோவில், திருவாரூர் தேர் தான் நியாபகம் வரும், திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம் என்றார்.
இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-
நீண்ட நாள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கியது நான் தான் என பெருமை தட்டியவர் யார் என உங்களுக்கு தெரியும்.
ரொம்ப நாளா ஓடாம இருந்த தேரை ஓடவைத்ததாக மார்தட்டிக் கொள்கிறார். அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறார்.
அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
திருவாரூர் மாவட்டம் தங்களின் சொந்த மாவட்டம் என சொல்லிக் கொள்பவர் கருவாடாக காய்வதை கண்டு கொள்ளவில்லை.
எல்லா இடத்திற்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீர்கள், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் ஒரு அடிப்படை சாலை வசதி இல்லை.
உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார். திருவாரூரில் உள்ள மெடிக்கல் கல்லூரி தான் வைத்தியம் பார்க்கும் நிலையைில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளம்பினார்.
- திருவாரூரில் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளப்பிய விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், திருவாரூரில் விஜய் பரப்புரை செய்யவுள்ள பகுதியில் கோவில் கோபுரத்தின் மீது தவெகவினர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தவெகவிரை கோயில் கோபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
- இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்.
- படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.
- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே திருநாட்டியாத்தங்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாங்கனி (வயது 39). இவரது கணவர் கலியபெருமாள். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
மாங்கனி சம்பவத்தன்று தனது வீட்டிற்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் வழக்கம் போல் காலை குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்-சத்தியகலா தம்பதியின் மகன் ஹேம்சரண் (10), பெரும்புகலூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாளின் மகன் கவியரசன் (11) ஆகியோர் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்துள்ளனர்.
இதில் படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஹேம்சரணின் கையைப் பிடித்துள்ளார். இதனால் ஹேம்சரணும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் 2 பேரும் ஆற்று நீரில் சிக்கி தத்தளித்தனர். இதனை கண்ட மாங்கனி உடனடியாக ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தார்.
ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இருவரையும் அவரால் கரைக்கு கொண்டு வர முடியவில்லை. இருப்பினும் அவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுவர்கள் இருவரையும் மேடான பகுதிக்கு இழுத்து வந்து கூச்சலிட்டார்.
அப்போது அவ்வழியாக சென்ற சிலர் இவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் கவியரசன் ஆற்றுநீரை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கிறார்.
இதையடுத்து துணிச்சலாக செயல்பட்டு ஆற்றில் குதித்து தனது உயிரை பணயம் வைத்து 2 சிறுவர்களையும் காப்பாற்றிய மாங்கனியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். மேலும் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளபக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "பிறருக்கொரு துயரெனில் முன்னின்று காப்பது தமிழர்களின் இயல்பு, பண்பு. அப்பண்பின் தைரியமிகு இலக்கணமாய் திகழும் சகோதரி மாங்கனிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்" என பதிவிட்டுள்ளார்.
- ஒவ்வொரு கட்சியும் அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
திருவாரூர்:
திருவாரூரில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை. ஒவ்வொரு கட்சியும் அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனின் பதவியில் பறிக்கப்பட்டது உட்கட்சி பிரச்சினை.
வருகின்ற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்துக்கள் என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பழக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை. தற்போது அனைத்து விலைவாசியும் உயர்ந்து விட்டது. தங்கம் விலை, சொத்து வரி உள்பட அனைத்தும் உயர்ந்து விட்டது. இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் சேர்த்து குறைக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆளுமை மிக்க தலைவர். ஒரு பெண் தலைவர் எனது 'ரோல் மாடல்' என நான் பலமுறை ஜெயலலிதாவை சொல்லி இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவர் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.
- தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.
திருவாரூர்:
"உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் தே.மு.தி.க. பிரசாரத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி உள்ளார்.
இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக விஜயகாந்த் நினைவாக கேப்டன் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் ரோடுஷோ மேற்கொண்டார். இதில் அவர் கடைவீதி, நேதாஜி ரோடு, கீழவீதி வரை நடந்து சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் தே.மு.தி.க. தொண்டர்கள், பெண்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
மேலும் பெண்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் முரசை அடித்து தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கொண்டிருக்கிறோம்.
அங்கெல்லாம் மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.
வருகிற 2026-ம் ஆண்டு தே.மு.தி.க.விற்கான காலம். அப்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து வெற்றி பெறுவோம்.
கேப்டன் விஜயகாந்த் நம்முடன் தான் இருக்கிறார். நம்முடைய உணர்விலும், உள்ளத்திலும் என்றும் இருக்கிறார். அவரது சொத்து தமிழக மக்கள் தான். சந்திரகிரகணம் இன்று இரவு (அதாவது நேற்று) பிடிக்கிறது என்கிறார்கள்.
அதுபோல் அரசியலில் யார் யாருக்கு கிரகணம் பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. 2026-ல் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்பார்கள்.
வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
திருவாரூருக்கு நான் வந்தவுடன் பொதுமக்கள் நேரடியாக என்னிடம் வந்து ரோடு வசதி இல்லை, ரெயில் வசதி இல்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இவையெல்லாம் 2026-ல் களையப்படும். இன்றிலிருந்து தே.மு.தி.க.வின் 2.0 கவுண்ட்டவுன் ஆரம்பித்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை.
- தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வல விசர்ஜன நிகழ்ச்சியில் பா.ஜ.க. கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றிவிட்டது. விநாயகரை கரைப்பதற்கு கூட சென்னையில் தண்ணி லாரி கொண்டு வந்து குளத்தில் தண்ணீர் நிரப்பி கரைக்க வேண்டி இருக்கிறது.
எனவே, இளைஞர்கள் இதனை ஒரு சபதமாக ஏற்று முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி மேம்படுத்த வேண்டும். ஊருக்கு 100 இளைஞர்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும்.குளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இந்து அறநிலையத்துறை தனது பணியை ஒழுக்கமாக செய்தால் தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கோவில் வருமானம் மட்டும் போதும். இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கை அதள பாதாளத்தில் உள்ளது. இன்று சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலம் காணாமல் போய்விட்டது. திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக தரப்பட்டது. அதில் ஒரு மாட்டையும் காணவில்லை.
கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 46 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை கூட பெரும்பாலான கோவில்களில் நடக்கவில்லை.
வருங்காலத்தில் இந்து அறநிலையத்துறை என்கிற துறை இருக்கவே கூடாது. எனவே, இந்த தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
- காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.
கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய்குமார், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி உள்ளனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு பவுனியா, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன' என கூறினார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
- கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.
இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
- கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தானது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற செப்டம்பரில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 3-ந்தேதி நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.
கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.






