என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மாயாண்டி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    நெல்லை:

    நெல்லை மேலப் பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கொலை

    இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். குறுக்குத்துறையை கடந்து கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக நெல்லை ஐகிரவு ண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்விரோதம்

    இந்த கொலை தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணை யில் மாயாண்டிக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(20) என்பவர் தூக்கி புதருக்குள் வீசி விட்டனர். இதனால் மாயாண்டி கோபத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கண்ணனின் தந்தை சுடலை, மாயாண்டி வசிக்கும் தெரு வழியாக சுக்கு காபி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது மாயாண்டி அவரிடம் கிரை ண்டர் திருட்டு போனது குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கண்ணனிடம் பேசி கண்டிக்குமாறு கூறியுள்ளார். உடனே சுடலையும் சம்மதம் தெரி வித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

    தொடர்ந்து அவர் தனது வீட்டுக்கு சென்று தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவில் மாயாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. அதேநேரத்தில் கொலையை செய்துவிட்டு அடுத்த நிமிடத்திலேயே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து பஸ்சில் திருப்பூருக்கு இரவோடு இரவாக புறப்பட்டு சென்றுவிட்டனர்.

    அங்குள்ள தாராபுரம் போலீஸ் நிலையத்தில் கண்ண னும், அவரது 2 நண்பர்களும் சரண் அடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து வருவதற்காக தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் தந்தை பலவேசம், கண்ணன் உள்பட வேறு 3 நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதால் சரண் அடைந்த 3 பேரையும் அழைத்து வந்து விசாரித்தால் மட்டுமே மேற்கொண்டு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கி டையே மாயாண்டி யின் உடலை பெற்று க்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரி வித்துள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    • பிஷப் பர்னபாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதாக உதவி கலெக்டர் கார்த்திகேயினி உத்தரவிட்டார்.
    • ஜனவரி மாதம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

    நெல்லை:

    தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல திருச்சபையில் பிஷப் பர்னபாஸ் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் ஆகியோர் தலைமையில் இரு தரப்பினராக பிரிவு ஏற்பட்டு நடந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் பிஷப் பர்னபாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதாக உதவி கலெக்டர் கார்த்திகேயினி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திருமண்டல அலுவலகம் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று பிஷப் பர்னபாஸ் தலைமையில் அங்கே ஜெபம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    சுமார் 1 மாதமாக அடைக்கப்பட்டிருந்த டயோசீசன் அலுவலகம் திறக்கப்பட்டது. ஏன் எதற்காக பிரச்சினை எழுந்தது என்பது தெரிய வில்லை. இனியும் அனைவரும் சகோதரத்து வத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். யாரையும் இந்த விஷயத்தில் குறை சொல்ல விரும்பவில்லை.

    திருச்சபை அன்பை வெளிப்படுத்துவது. எல்லோரும் இணைந்து செயல்படுவோம்.வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதத்துடன் எங்களுடைய குழுவின் பதவி காலம் முடிவடைகிறது. வருகிற ஜனவரி மாதம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனக ராஜ், உயர்கல்வி மேலாளர் சுதர்சன், ஆரம்பக் கல்வி மேலாளர் அருள்ராஜ் பிச்ச முத்து, சொத்து கமிட்டி சத்தியநேசன், கல்லூரி தாளாளர்கள் கே.பி.கே. செல்வராஜ், ஜெகன், ஜெய்கர், கதீட்ரல் பள்ளி தாளாளர் சாலமோன் டேவிட், அசோக், மாரா சிங், வக்கீல்கள் ஜெனி, பாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் டியூக் துரைராஜ் உடன் இருந்தனர்.

    முன்னதாக டயோசீசன் அலுவலகத்துக்கு வந்த பிஷப் பர்னபாசுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

    • வேளாண், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தினால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே நீரை பயன்படுத்த இயலும்.
    • ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மழை பற்றாக்குறை காரணமாகவும், தாமிரபரணி குடிநீரையே நம்பி உள்ள 3 மாவட்ட மக்களின் நலன் காக்கும் விதமாகவும் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு நீர்வரத்தை பொறுத்து மட்டும் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மணிமுத்தாறு அணையிலும் போதிய நீர் இல்லாத நிலையில் தற்போது உள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் ஒரு நாளைக்கு 300 முதல் 350 கன அடி பயன்படுத்தினால் 40 முதல் 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வேளாண் மற்றும் குடிநீர் தேவை ஆகிய 2-க்கும் வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தி னால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும்.

    இது தொடர்பாக நீர்வளத்துறையால் விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது. அதுபோன்ற அவ தூறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    குடிநீர் தேவைக்காக மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இதுகுறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.15 மணிக்கு முதல் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது.
    • இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். அதன்படி 138-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.15 மணிக்கு முதல் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியை தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அர்ச்சித்தார். தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    தேர் பவனி

    இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.10-ம் திருவிழாவான இன்று பாளையங்கோட்டை ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. மாலை 7 மணிக்கு முதல் சனி திருப்பலி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை ஜாண் ரோஸ் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.

    • இந்தாண்டு திருவிழா 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் நாராயணனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    முக்கூடல்:

    முக்கூடலில் உள்ள பிரசித்தி பெற்ற நாராயணசாமி கோவில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 5 மணிக்கு வருஷாபிஷேகம், கோபுர கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் ஊர்வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் நாராயணனுக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்ன தர்மமும், மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி ஊர்வலமாக வரும். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையும், இரவில் நாராயணர் சப்பர பவனியும், தினசரி இரவில் அன்னதானமும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இரவில் முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    • சம்பவத்தன்று மணி பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார்.
    • வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நெடுவிளை வடக்குத் தெருவை சேர்ந்தவர் மணி (வயது70). விவசாயி. சம்பவத்தன்று இவர் பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார். வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பபேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
    • வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு புதிய சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அகலப்படுத்த கோரிக்கை

    மாநகர பகுதியில் தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பாளை மத்திய சிறையில் இருந்து ரெட்டியார்பட்டி விலக்கு வரையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக 22 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் அகலப்படுத்த பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன. இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரா வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் வண்ணார்பேட்டையில் இருந்து ரெயில்வே மேம்பாலத்தை கடந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் தெற்கு பைபாஸ் சாலையில் பாளையங்கால்வாய் கடக்கும் பகுதியில் குறுகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சாலைகள் அளவுக்கு ஏற்ப இந்த பாலம் இல்லாமல் ஒடுக்கமாக இருப்பதால் இருபுறத்தில் இருந்தும் பஸ்கள் வேகமாக வரும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது. இதனால் இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்ட வேண்டும் என்றும், வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், விபத்தை தடுக்க சாலையின் நடுவில் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீடு

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கால்வாயை விரிவாக்கம் செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் மண் பரிசோதனை செய்யப்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்வதற்கு ஆகும் செலவு குறித்து புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றி நடுவில் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.80 கோடி திட்ட மதிப்பீடாக வழங்கப்பட்டது.

    பணிகள் தொடக்கம்

    அதற்கு அனுமதி கிடைத்த நிலையில் தற்போது சாலைகள் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து பாளையங்கல்வாயை இருபுறமும் அகலப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    பைபாஸ் சாலை சுமார் 20 மீட்டர் அகலத்திலும், நடுவில் சென்டர் மீடியன் அமைக்க கூடுதல் இடமும் ஒதுக்கீடு செய்து அமைக்கப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் பேட்டி

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலையில் விபத்தை குறைப்பதற்காக சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி இருந்தோம். அதன்படி முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சிறிய பாலங்கள் மற்றும் பாளையங்கால்வாயை அகலப்படுத்தும் பணிகளும் அடங்கும். முதல் கட்டமாக வடக்கு பைபாசில் ரெயில்வே மேம்பாலத்திற்கு அடுத்ததாக இந்த அகலமான நான்கு வழிச்சாலை ஆரம்பித்து புதிய பஸ் நிலையம் வரையிலும் நான்கு வழிச்சாலையாகவே அமைக்கப்படுகிறது.

    நடுவில் 1.2 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. இருபுறமும் தலா 9 மீட்டர் அகலத்தில் சாலைகள் இருக்கும். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சிக்னல் பகுதியில் ரவுண்டானா ஏதும் அமைக்கப்படவில்லை. அங்கும் நான்கு வழிச்சாலை தான் அமைக்கப்படுகிறது. அங்கு நவீன தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.

    ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணி

    இந்த பணிகள் முடிந்த பின்னரே தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் மற்றும் வண்ணார்பேட்டை பாளையங்கால்வாய் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆகியவை அகலப்படுத்தும் பணி தொடங்கும். இந்த 2 பாலங்களையும் அகலப்படுத்துவதற்காக ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே சார்பில் ஒப்புதல் கிடைத்ததும் அந்த 2 பாலங்களையும் அகலப்படுத்தும் பணி தொடங்கும். தற்போது கணக்கீட்டின்படி 5.8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. செல்லப் பாண்டியன் மேம்பாலம் அதே நிலையிலேயே நான்கு வழி சாலை மேம்பாலமாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இது தவிர சாலைகளின் நடுவில் அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது.

    அதேபோல் தச்சநல்லூர் ஆற்று பாலத்துக்கு அருகே வடபகுதியில் புதிதாக ஒரு ஆற்றுப் பாலம் கட்டப்பட உள்ளது. அவை இரண்டும் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை போலவே ஒரு வழிப்பாதைகளாக செயல்படும்.

    இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி விபத்துகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அம்பை உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கூனியூர், காருகுறிச்சி பகுகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ஓ.துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும்.

    அதன்படி ஓ. துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆழ்வான் துலூக்கப் பட்டி, ஒ. துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை ஆகிய பகுதி இடங்களிலும், வீரவநல்லூர் துணை மின்நிலைய விநியோக பகுதி களான கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி பகுகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல் அம்பை, மணிமுத்தாறு துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி மற்றும் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும். மேலும் கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலை யப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிப் பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுமி முருகேஸ்வரியை, கருத்தபாண்டி வளர்த்து வந்த நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
    • ஆடுகளை மேய்க்க சென்ற கொம்பையாவை ஒரு கும்பல் கொலை செய்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் 17-வது தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). விவசாயி. இவரது மனைவி நல்ல தாய். இவர்களது மகள்கள் செல்வ முப்பிடாதி, முருகேஸ்வரி (12).

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கருத்தபாண்டி என்ற கண்ணன் (45). கட்டிட தொழிலாளி.

    கொலை

    இந்நிலையில் சிறுமி முருகேஸ்வரியை, கருத்தபாண்டி வளர்த்து வந்த நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கருத்தபாண்டிக்கும், கொம்பையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கொம்பையா சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கொம்பையா மீது கருத்தபாண்டி ஆத்திரம் அடைந்து

    நேற்று காலையில் தனது ஆடுகளை மேய்க்க சென்ற கொம்பையாவை ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருத்தபாண்டி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று இரவு கருத்தபாண்டியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    திட்டியதால் ஆத்திரம்

    எனது நாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகளை கடித்து விட்டது. இது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொம்பையா என்னிடம் புகார் சொல்லாமல் அடிக்கடி எனது உறவி னரிடம் குறை கூறி வந்தார். மேலும் வந்து வழியாக நடந்து செல்லும் போ தெல்லாம் யாரையோ திட்டுவது போல் எங்களை ஜாடை காட்டி திட்டிக் கொண்டிருப்பார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவர் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் கொத்தனார் வேலை பார்க்கும் 2 பேரை அழைத்துக் கொண்டு பேச சென்றேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்தோம் என்றார்.

    இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பேட்டையை சேர்ந்த மாரிபாண்டி மற்றும் ஜான் டேனியல் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • மண் திருட்டு குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    நெல்லை:

    விஜயநாராயணம் அருகே இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பகுதி அருகே வந்து கொண்டிருந்த டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தார்.

    அதில் சட்டவிரோதமாக சரள் மண்ணை ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனடியாக இது தொடர்பாக அவர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மண் திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டம் தெற்கு தோழா பண்ணை வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது46), நாசரேத் நோச்சிகுளம் கோகுல் (21), தெற்கு வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா (27), வேலாயுதபுரத்தை சேர்ந்த இசக்கிதுரை (20) ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 ½ யூனிட் சரள் மண் மற்றும் 4 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.
    • மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகியதால் மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது.

    களக்காடு:

    களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் பத்மநேரி பெரியகுளத்தின் கரையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.

    தீயணைக்கும் பணி

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மரம் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. மேலும் மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகி சேதமடைந்ததால், மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக நாங்குநேரி தீ அணைப்பு நிலையத்திற்கும் நெடுஞ்சாலைதுறை யினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் விரைந்து வந்த தீ அணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைதுறை ஊழி யர்கள் துரிதமாக செயல்பட்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதையடுத்து களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்டதும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    தீ விபத்து ஏற்பட்ட மரத்தின் அருகே அறுவடை செய்யப்பட்ட வாழைமர குப்பைகளை கொட்டப்பட்டுள்ளது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்த தீ மரத்திலும் பற்றியதாக கூறப்படுகிறது.

    • குருந்துடையார்புரம் ரெயில்வே கேட் அருகே மர்ம கும்பல் முகேசை வெட்டிக்கொலை செய்தது.
    • முகேஷ் ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தெரிவித்து வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் அருகே உள்ள கீழ வீரராகவ புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மகன் முகேஷ் (வயது 32). இவர் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவிதா (26) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கொலை

    நேற்று முன்தினம் இரவு உணவு வினியோகம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற முகேசை அங்குள்ள குருந்துடையார்புரம் ரெயில்வே கேட் அருகே மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த மகராஜன் (20), அழகுமுத்து (22), முருகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    முகேஷ் ஏற்கனவே ஊர் நாட்டாண்மையாக இருந்துள்ளார். அப்போது ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், முகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.

    மேலும் கோவில் கொடை விழாவில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இருக்கும் வரை தங்களுக்கு இடைஞ்சல் தான் என்று அவர்கள் எண்ணியுள்ளனர்.

    மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சின்ன குட்டி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு முகேஷ்தான் காரணம் என நினைத்தும் அந்த வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்வார் என்று நினைத்தும் கைதா னவரின் ஆதரவாளர்களான முருகேஷ் உட்பட 3 பேரும் சேர்ந்து முகேஷை கொலை செய்ததாக போலீசாரிடம் கூறி உள்ளனர். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×