என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே விவசாயி கொலையில் 3 பேர் கைது- தொழிலாளி திடுக்கிடும் வாக்குமூலம்
- சிறுமி முருகேஸ்வரியை, கருத்தபாண்டி வளர்த்து வந்த நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
- ஆடுகளை மேய்க்க சென்ற கொம்பையாவை ஒரு கும்பல் கொலை செய்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் 17-வது தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). விவசாயி. இவரது மனைவி நல்ல தாய். இவர்களது மகள்கள் செல்வ முப்பிடாதி, முருகேஸ்வரி (12).
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கருத்தபாண்டி என்ற கண்ணன் (45). கட்டிட தொழிலாளி.
கொலை
இந்நிலையில் சிறுமி முருகேஸ்வரியை, கருத்தபாண்டி வளர்த்து வந்த நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கருத்தபாண்டிக்கும், கொம்பையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கொம்பையா சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கொம்பையா மீது கருத்தபாண்டி ஆத்திரம் அடைந்து
நேற்று காலையில் தனது ஆடுகளை மேய்க்க சென்ற கொம்பையாவை ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருத்தபாண்டி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று இரவு கருத்தபாண்டியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-
திட்டியதால் ஆத்திரம்
எனது நாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகளை கடித்து விட்டது. இது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொம்பையா என்னிடம் புகார் சொல்லாமல் அடிக்கடி எனது உறவி னரிடம் குறை கூறி வந்தார். மேலும் வந்து வழியாக நடந்து செல்லும் போ தெல்லாம் யாரையோ திட்டுவது போல் எங்களை ஜாடை காட்டி திட்டிக் கொண்டிருப்பார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவர் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் கொத்தனார் வேலை பார்க்கும் 2 பேரை அழைத்துக் கொண்டு பேச சென்றேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்தோம் என்றார்.
இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பேட்டையை சேர்ந்த மாரிபாண்டி மற்றும் ஜான் டேனியல் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்