search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளில் நாளை  மின்தடை
    X

    கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளில் நாளை மின்தடை

    • அம்பை உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கூனியூர், காருகுறிச்சி பகுகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ஓ.துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும்.

    அதன்படி ஓ. துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆழ்வான் துலூக்கப் பட்டி, ஒ. துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை ஆகிய பகுதி இடங்களிலும், வீரவநல்லூர் துணை மின்நிலைய விநியோக பகுதி களான கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி பகுகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல் அம்பை, மணிமுத்தாறு துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி மற்றும் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும். மேலும் கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலை யப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிப் பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×