search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athisaya Panimatha church"

    • கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.15 மணிக்கு முதல் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது.
    • இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். அதன்படி 138-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.15 மணிக்கு முதல் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியை தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அர்ச்சித்தார். தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    தேர் பவனி

    இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.10-ம் திருவிழாவான இன்று பாளையங்கோட்டை ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. மாலை 7 மணிக்கு முதல் சனி திருப்பலி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை ஜாண் ரோஸ் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.

    • 6-ம் திருவிழாவான நேற்று காலையில் திரியாத்திரை திருப்பலி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • பவனி மாதா காட்சி கொடுத்த மலையைச்சுற்றி வலம் வந்த பின்னர் மீண்டும் மாதா கோவிலை வந்தடைந்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் மாதா காட்சி கொடுத்த மலையை சுற்றிலும் மரிவல வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய 138-வது ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் திரியாத்திரை திருப்பலி மற்றும் மாலை மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று வருகிறது.

    மரிவல வழிபாடு

    6-ம் திருவிழாவான நேற்று காலையில் திரியாத்திரை திருப்பலி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழா நாளில் பவுர்ணமி தினமாக வந்ததை அடுத்து வழக்கமான பவுர்ணமி மரிவல வழிபாடு சிறப்பு பெற்றது. மாலையில் பக்தர்கள் அதிசய பனிமாதா சப்பரம் கோவில் முன்பிருந்து பவனியாக எடுத்து சென்றனர்.

    இப்பவனி மாதா காட்சி கொடுத்த மலையைச்சுற்றி வலம் வந்த பின்னர் மீண்டும் மாதா கோவிலை வந்தடைந்தனர். மரிவல வழிபாட்டில் கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்கு தந்தை ஜாண்ரோஸ் மற்றும் திரளாக பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நற்கருணை மற்றும் ஆசீர் நடைபெற்றது.

    ×