search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் பவுர்ணமி மரிவல வழிபாடு

    • 6-ம் திருவிழாவான நேற்று காலையில் திரியாத்திரை திருப்பலி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • பவனி மாதா காட்சி கொடுத்த மலையைச்சுற்றி வலம் வந்த பின்னர் மீண்டும் மாதா கோவிலை வந்தடைந்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் மாதா காட்சி கொடுத்த மலையை சுற்றிலும் மரிவல வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய 138-வது ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் திரியாத்திரை திருப்பலி மற்றும் மாலை மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று வருகிறது.

    மரிவல வழிபாடு

    6-ம் திருவிழாவான நேற்று காலையில் திரியாத்திரை திருப்பலி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழா நாளில் பவுர்ணமி தினமாக வந்ததை அடுத்து வழக்கமான பவுர்ணமி மரிவல வழிபாடு சிறப்பு பெற்றது. மாலையில் பக்தர்கள் அதிசய பனிமாதா சப்பரம் கோவில் முன்பிருந்து பவனியாக எடுத்து சென்றனர்.

    இப்பவனி மாதா காட்சி கொடுத்த மலையைச்சுற்றி வலம் வந்த பின்னர் மீண்டும் மாதா கோவிலை வந்தடைந்தனர். மரிவல வழிபாட்டில் கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்கு தந்தை ஜாண்ரோஸ் மற்றும் திரளாக பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நற்கருணை மற்றும் ஆசீர் நடைபெற்றது.

    Next Story
    ×