search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surrendered"

    • மாயாண்டி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    நெல்லை:

    நெல்லை மேலப் பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கொலை

    இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். குறுக்குத்துறையை கடந்து கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக நெல்லை ஐகிரவு ண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்விரோதம்

    இந்த கொலை தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணை யில் மாயாண்டிக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(20) என்பவர் தூக்கி புதருக்குள் வீசி விட்டனர். இதனால் மாயாண்டி கோபத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கண்ணனின் தந்தை சுடலை, மாயாண்டி வசிக்கும் தெரு வழியாக சுக்கு காபி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது மாயாண்டி அவரிடம் கிரை ண்டர் திருட்டு போனது குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கண்ணனிடம் பேசி கண்டிக்குமாறு கூறியுள்ளார். உடனே சுடலையும் சம்மதம் தெரி வித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

    தொடர்ந்து அவர் தனது வீட்டுக்கு சென்று தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவில் மாயாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. அதேநேரத்தில் கொலையை செய்துவிட்டு அடுத்த நிமிடத்திலேயே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து பஸ்சில் திருப்பூருக்கு இரவோடு இரவாக புறப்பட்டு சென்றுவிட்டனர்.

    அங்குள்ள தாராபுரம் போலீஸ் நிலையத்தில் கண்ண னும், அவரது 2 நண்பர்களும் சரண் அடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து வருவதற்காக தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் தந்தை பலவேசம், கண்ணன் உள்பட வேறு 3 நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதால் சரண் அடைந்த 3 பேரையும் அழைத்து வந்து விசாரித்தால் மட்டுமே மேற்கொண்டு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கி டையே மாயாண்டி யின் உடலை பெற்று க்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரி வித்துள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    • கோவையில் ரவுடி சுட்டு கொலை செய்யப்பட்டார்.
    • போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

    கோவை,

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சத்திய பாண்டி (வயது 32). இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலை வழக்கில் சத்திய பாண்டி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இவருக்கும் மற்றொரு கூலிப்படையை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சத்தியபாண்டி கடந்த 12-ந் தேதி ஆவாரம்பாளையம் ேராட்டில் ஒரு கும்பலால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சஞ்சய் தலைமையிலான கும்பல் சத்திய பாண்டி னை கொலை செய்தது தெரிய வந்தது.

    கொலை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை கும்பலை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிபதி சரணடைந்த 4 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் சஞ்சய், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    சரணடைந்த 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி கோவை போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசில் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    குளித்தலை அருகே வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீல் உள்பட 2 பேர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    நாமக்கல்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கம்மநல்லூரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 70). வாழைக்காய் வியாபாரி. இவரது மகன் மணிவண்ணன் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் பிச்சைமுத்து (44) என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிச்சைமுத்து குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பரமசிவம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அவரது மகன் மணிவண்ணன் லாலாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்து, அவரது தம்பி முருகானந்தம் ஆகிய இருவரையும் தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று வக்கீல் பிச்சைமுத்து, முருகானந்தம் (34) ஆகிய இருவரும் நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி அவர்கள் இருவரையும் வருகிற 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி என்பது தொடர்பாக தொல்லியல் துறை தகவல் அளித்துள்ளது. #KohinoorDiamond #MaharajaLahore #British #ASI
    புதுடெல்லி:

    புகழ்பெற்ற கோஹினூர் வைரம், 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. அது, 108 காரட் கொண்டது. அளவில் மிகப்பெரியது. எந்த நிறமும் இல்லாதது. அதன் மதிப்பு 20 கோடி டாலர் (ரூ.1,480 கோடி) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அந்த வைரம், ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது. தற்போது, இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கோஹினூர் வைரத்துக்கு இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    இந்நிலையில், அந்த வைரம் இங்கிலாந்திடம் சென்றது எப்படி? என்று பிரதமர் அலுவலகம் தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரோகித் சபர்வால் என்பவர் விண்ணப்பித்தார். அதற்கு இந்திய தொல்லியல் துறை பதில் அளித்துள்ளது.

    அதில், “டெல்லியில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களின்படி, டல்ஹவுசி பிரபுவுக்கும், லாகூர் மகாராஜா துலீப் சிங்குக்கும் இடையே 1849-ம் ஆண்டு லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இங்கிலாந்து ராணியிடம் மகாராஜா கோஹினூர் வைரத்தை ஒப்படைத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

    பஞ்சாப்பை ஆண்ட மன்னரின் வாரிசுகள், கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணிக்கு பரிசாக அளித்ததாக கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. ஆனால், அதற்கு முரணாக, தொல்லியல் துறை இந்த தகவலை அளித்துள்ளது.  #KohinoorDiamond #MaharajaLahore #British #ASI
    ×