என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கனரக வாகனங்கள் செல்வ–தால் சேதம் அடைந்துள்ள–தாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
    • வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத் திற்கு உட்பட்ட மானாமதுரை பரமக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சவடு மணல்கள் ஏற்றி வரும் லாரிகள் அளவுக்கு அதிவேகமாக லோடுகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது.

    அவ்வாறு இயக்கப்படும் லாரிகளை டிரைவர்கள் அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தெ.புதுக் கோட்டை, கோச்சடை, சின்ன புதுக்கோட்டை, குறிச்சி, நல்லாண்டிபுரம், காரைக்குடி பகுதி கிராம மக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

    இப்பகுதியில் உள்ள சாலை புதுப்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்களை ஆன நிலையில் மீண்டும் கனரக வாகனங்கள் செல்வதால் சேதம் அடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படு–கிறது.

    மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பிரதான தொழில் விவசாயம் என்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சாலையில் சொல்லும் போது உயிரி–ழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சவடுண் லாரிகளின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கீழடியில் நிழற் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்காக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லா கான், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுப்பையா, ராமு, தி.மு.க. கிழக்கு ஒன் றியச் செயலர் கடம்பசாமி, நகரச் செயலர் நாகூர்கனி, நிர்வாகி கள் மகேந்திரன், இளங்கோவன், ரவி, கோபால், தேவதாஸ், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 4 பேரிடம் விசாரணை நடத்தி 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வையகளத்தூர் கிராமத்தில் உள்ளது கருவ கண்மாய். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்கண்மாயில் அடிக்கடி சவடு மண்களை டிராக்டர், லாரி, மாட்டுவண்டிகள் கொண்டு அள்ளுவதாக கண்டவராயன்பட்டி காவல் ஆய்வாளர் கலைவாணிக்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அவர் அதிரடியாக கருவக் கண்மாய்க்கு போலீசாருடன் சென்றார். அப்போது அங்கு ஒரு ஜே.சி.பி. எயந்திரம் கொண்டு 3 டிராக்டர்களில் சவடு மண்ணை அள்ளி கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கீழத்தெரு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் பிரபு (26), வள்ளியப்பன் (67), வீரையா (40) மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ரகு (31) ஆகிய நான்கு பேரிடம் விசா ரணை நடத்தி 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி குரூப் கிராம நிர்வாக அலுவலர் ரிஹானாபேகம் கொடுத்த புகாரின் அடிப் படையில் வழக்குபதிவும் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    • திருவிழா தகராறில் மகனை மிரட்ட தந்தை மீது தாக்குதல் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள பெருமாள் கோவில் பகுதி–யைச் சேர்ந்தவர் பாக்கிய–ராஜ். இவரது 17 வயது மகனுக்கும், சிவகங்கை ஆவ–ரங்காடு பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது சிறு–வர்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடை–பெற்ற பிள்ளை வயல் காளி–யம்மன் கோவில் திருவிழா–வில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து நேற்று 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் பாக்கியராஜின் வீட்டுக்கு வந்து அவரது மகன் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு பாக்கியராஜ் தெரியாது என்று கூறியுள்ளார். இத–னால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் பாக்கிய–ராஜை அவதூறாக பேசியதோடு, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து பாக்கியராஜ் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்.

    • சதுரங்க போட்டி நடந்தது.
    • மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தின் சாணக்யா அகாடமி ஒருங்கிணைப்பில் சதுரங்க போட்டி மான்போர்ட் பள்ளியில்நடந்தது. 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மொத்தம் 235 மாணவர்கள் கலந்து கொண்டனர். மான்போர்ட் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் இக்னேஷியஸ் தாஸ் தலைமை வகித்தார்.

    சதுரங்க போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ரமேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலையில் நடைபெற்ற போட்டிகளுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை பிரிவின் துறை தலைவர் டாக்டர் ஜிம் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சாணக்கியா அகாடமி ஒருங்கிணைத்து நடத்தியது.

    • ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை அணி வெற்றி பெற்றது.
    • மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

    காரைக்குடி

    மாநில அளவிலான 11-வது ஜூனியர் ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.இதில் சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்ட அணி கள் பங்கேற்று விளையாடி யது.

    சிவகங்கை மாவட்ட அணி லீக் சுற்றுகளில் திண் டுக்கல், திருச்சி அணிகளை வீழ்த்தி காலிறுதி போட்டி யில் மதுரையை வென்றது.பின்பு நடைபெற்ற அரை இறுதி போட்டியில் செங்கல் பட்டு அணியை வென்று இறுதி போட்டிக்கு முன் னேறியது. இறுதி போட்டி யில் கோயமுத்தூர் அணியி டம் தோல்வி அடைந்து 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது.

    சிவகங்கை மாவட்ட அணியில் விளையாடிய தருண், தீபேஷ், வெற்றிவேல், ஸ்ரீராம், கிஷோர், விஷ்வா, இளமாறன், பிரனேஷ், ஜஸ்வந்த் பெருமாள், ஆதித்யா, காஞ்சி ரித்தீஷ், அபிஷேக் ஆகிய மாணவர் களை ஆசிரியர்கள் பெற் றோர்கள் பாராட்டினர்.சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் தபேந்தி ரன், பாலா, வைத்தீஸ்வரன், தயாளன் ஆகியோர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

    • ரூ.8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பொதுமக்களிட மிருந்து 482 மனுக்கள் பெறப்பட்டது.

    இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் தமிழ் மன்றம் சார்பில் மாநில அளவில் மேல் நிலைப்பள்ளி மாணவர்க ளிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும், பேச்சு போட்டியில் 3-வது இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசு, சான்றிதழ் களையும் வழங்கினார்.

    மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலையும், தோட்டக் கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.18 ஆயிரம் மானிய தொகைகான ஆணையையும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் மானிய ஆணையை யும் வழங்கினார்.

    தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தின் மூலம் மானாமதுரையில் மண்பாண்டம் தொழில் செய்யும் 25 தொழிலா ளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்து 400 வீதம் மொத்தம் ரூ.5.10 லட்சம் சைலாவீல்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் 118 குழந்தைகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டில் உதவி பராமரிப்பு நிதி என மொத்தம் 139 பயனாளி களுக்கு ரூ.7.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி களை கலெக்டர் வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
    • புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியில் காப்பார அய்யனார் கோவில் உள்ளது. இங்கு கரடி கருப்பர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு சமுதாய மக்கள் விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடியின்றி வாழவும், கரடி கருப்பர் சாமிக்கு பக்தர்கள் கரடி வேடத்தில் புரவிகள் எடுத்து வழிபாடுவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரடி அமைப்பில் மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் எடுத்து வினோத வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி யின்றி வாழவும் மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    முன்னதாக சிங்கம்புணரி குலாலர் தெருவில் புரவிகளை செய்வதற்கு பிடிமண் கொடுத்து அவர்கள் செய்து வைத்திருந்த கரடி மற்றும் குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள காப்பார அய்யனார் கோவிலுக்கு தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கிராமிய சூழ்நிலையில் நேர்த்திக்கடன் செய்த காட்சிகள் மனதை கவரும் விதமாக அமைந்திருந்தது.

    • 34-ம் ஆண்டு கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.
    • கஞ்சிக்கலய ஊர்வலத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் மேல் மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர் சக்தி பீடத்தின் 34-ம் ஆண்டு ஆடி பெரு விழா நடைபெற்றது. முன்ன தாக கொடி யேற்றத்துடன் விழா தொடங்கியது. 108 பெண்கள் கலந்து அக்னி சட்டி நடைபெற்றது. இன்று காலை கருதாவூரணியில் மலைக்கோவில் அருகில் இருந்து 5,004 பெண்கள் கலந்து கொண்ட கஞ்சிக் கலையம் எடுக்கும் நிகழ்ச்சி யை அமைச்சர் பெரியகருப் பன் தொடங்கி வைத்தார்.

    உடன் நகர் மன்ற உறுப்பி னர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்த னர். இந்த கஞ்சிக்கலையம் சிவன் கோவில், பேருந்து நிலையம், திருப்பத்தூர் ரோடு வழியாக கோவில் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து யூனியன் அலுவ லகம் அருகே உள்ள ஜெயம கொண்ட விநாயகர் கோவி லில் இருந்து மகளிர் பால் குடம் எடுத்து வந்தனர்.

    தேவகோட்டை ஆதிபரா சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடை பெற்று அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வீரஅழகர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
    • வருகிற 1-ந்தேதி செவ்வாய் கிழமை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரஅழகர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு தோறும் ஆடிதிருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதில் முக்கிய நிகழ்வான சுந்தரராஜ பெருமாள்- சவுந்திரவல்லி தாயார் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதில் யானை வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்-சவுந்திரவள்ளி தாயார் புதிய திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

    சுந்தரபுரம் கடை வியாபாரிகள் சார்பில் 7-ம் நாள் மண்டகபடி விழா நடைபெறுகிறது. இதில் இரவு சுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 1-ந்தேதி செவ்வாய் கிழமை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    • இளையான்குடி மேல்நிலை பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    இளையான்குடி மேல்நிலைப் பள்ளியை பொருத்த வரையில் கடந்த 1947-ல் இளையான்குடி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என்ற பெயருடன் தொடங்கப்பட்டு, கே.எம்.கே அப்துல் கரீம் முதல் தாளாளராக இருந்து பள்ளியை வழிநடத்த தொடங்கினார். அச்சமயம், சிவகங்கை மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.

    மேலும் அரசுடன் இணைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அரசிற்கு உறுதுணையாக இருந்து வரும் கொடை யாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 75-வது ஆண்டு பவள விழா காணும் இப்பள்ளி, நூற்றாண்டு நோக்கி சிறப்பாக பயணிக்க வேண்டும்.

    மேலும் இப்பள்ளியில் கூடுதலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கான சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத் தலைவர் கஸ்னவி, மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பள்ளி தலைமையாசிரியர் முகமமது இல்யாஸ், மானா மதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் ஆரோக்கிய சாந்தா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வியை நாடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக ‘நான் முதல்வன்’ திட்டம் உள்ளது.
    • வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி பேராசிரியர்க ளுக்கான பயிற்சி கருத்த ரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு ேபசியதாவது:-

    "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த திட்டம் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    நான் முதல்வன் இயங்கு தளமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் தொழில் இலக்குகளை அடைந்திடவும், மாணாக்கர்களுக்கு ஆர்வமுள்ள துறையினை தேர்ந்தெடுத்து இதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சியினை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில், கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடத்த அரசால் அறிவுறுத்தப்பட்டு திறன்மிக்க பல்வேறு நிறுவனங்களை சார்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக பயிற்சி கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×