என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளியில் 1976-ம் ஆண்டில் 7-ம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் 47 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

    ஆசிரியை சாவித்திரி வரவேற்றார். இதில் பழைய மாணவர்கள் நீண்ட நாடகளுக்கு பிறகு சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

    அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

    • மானாமதுரை பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
    • பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் பள்ளியில் படித்து வரும் மாணவி லலிணா சென்னை ஆலந்துார் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் போட்டி நடைபெற்றது.

    தமிழ்நாடு கராத்தே சாம்பியன் 2023-க்கான இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். 

    இவரை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியை பேப்லிட் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜு, பூபாலன், கலைச்செல்வி கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் மற்றும் பெற்றோர் ரவீந்திரன் பாலபிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

    • திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
    • கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    மானாமதுரை

    திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் அருகே கருவேம்பு செல்ல அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடக்கு இளையாத்தங் குடியில் பூரண புஷ்கலா சமேத கருவேம்பு செல்ல அய்யனார் கோவில் உள்ளது. இங்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த ஜூன் 20-ந் தேதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சேங்கையிலிருந்து பிடி மண் கொடுத்தல் நடந்தது. தொடர்ந்து அரண்மணை குதிரை, நாட்டுக்குதிரை தலா ஒன்று, கிராமத்து குதிரை 32, நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்தார்களும், தங்கள் கிராமசாமியாடிகளுடன் சூளைக்கு வந்து புரவி களுக்கு மரியாதை செய்தனர். பின்பு சாமியாட்டம் நடந்தது. புரவி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் தங்களுக்கு பாத்தியப்பட்ட புரவிகளை தோளில் சுமந்தபடி எட்டரை கிராம மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புரவிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த புரவி எடுப்பு விழாவில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, கோயில் இளையாத்தங்குடி, சந்திரன் பட்டி, சேவிணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, ரகு நாதப்பட்டி, கீரணிப்பட்டி, முத்தூர்,விராமதி, கல்லாப்பேட்டை, அச்சரம் பட்டி, காவேரிபுரம் உள்ளி ட்ட எட்டரை கிராமத்தினர் பங்கேற்றனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து ெகாண்டாடினர்.
    • ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என தீர்ப்பு வெளியானது.

    திருப்பத்தூர்

    ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்துநிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர் காங்கிரஸ் தலைவர் அழகுமணிகண்டன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் பொருளாளர் பழனிவேல் ராஜன், மூத்த உறுப்பினர் பழனியப்பன், அழகப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிர்ஸ் தலைவர் சேதுமெய்யப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகளுடன் பக்தர்களுக்கு பிரமாண்ட விருந்து அளிக்கப்பட்டது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. மேலும் இங்கு சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதம் இந்த கோவில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி நேற்று திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதன்பின் ஆடி 18-ம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சர்வ தீப ஆரத்தியுடன் அன்னதான ஏற்பாடுகள் தொடங்கின.

    இதில் 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகள், 4டன் மளிகை பொருட்களுடன் 120 சமையல் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட விருந்து தயாரிக்கப்பட்டது.

    அதன்பின் சுவாமிக்கு படையல் பூஜை நடந்தது. வடித்து கொட்டப்பட்ட பிரம்மாண்ட அன்ன குவியலில் வேல் குத்தி சிவலிங்கம் பிடித்து பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • சிவகங்கையில் சுதந்திர தினவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சுதந்திர தினவிழாவை காண்பதற்காக வரும் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, போக்கு வரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டடார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாதேவி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • சிவகங்கையில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தில் பால்வளம், கால்நடை பராமரிப்பு துறைகளின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

    வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் கால்நடைகளுக்கு பயனுள்ள வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 240 முகாம்கள் நடத்தப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டும் 240 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    அதன் அடிப்படையில் மானாமதுரை பகுதிகளில் 2-வது மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    மேலும் இப்பகுதியல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இன்னும் கூடுத லாக பால் உற்பத்தியினை பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும். அசோலா தீவன உற்பத்தி செய்து கால்நடை வளர்ப்போர் பயன்பெற வேண்டும். அத்தீவனத்தின் மூலம் பால் உற்பத்தியும் மேம்படுத்துவதற்கு அவை அடிப்படையாக அமையும். இதுபோன்று பல்வேறு திட்டங்கள் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் அரசால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் விவசாயிக களுக்கு தாது உப்பு கலவை, உலர் தீவன மூடைகள், பால் உற்பத்தி யாளர்களுக்கு பாத்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் அங்கு அமைக்க ப்பட்டிருந்த கண்காட்சி யையும் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பு வனம் பேரூராட்சித் தலை வர் சேங்கைமாறன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், பொது மேலாளர் (ஆவின்) ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் முகமதுகான், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு இயற்கை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வன சரக அதிகாரி சுபாஷ் கலந்துகொண்டு இயற்கை வனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இறுதியாக இயற்கை கிளப் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

    • நெற்குப்பை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மன்ற அலுவலகத்தில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். செயல் அலுவலர் உமா மகேஸ்வ ரன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளை மன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பித்தார்.

    அதனைத் தொடர்ந்து தமிழக அரசு மன்ற உறுப்பி னர்களுக்கு உயர்த்தியுள்ள அகவிலைப்படிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் நகர்ப்புற திட்டத் தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைத்தல், நகரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான குடிநீர் ஊரணிகளான நல்லூரணி மற்றும் செட்டி ஊரணி ஆகியவற்றை சீரமைத்தல், மாநில நகர்புறத் திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சார சிக்கனத்தை ஏற்படுத்தும் விதமாக புதிய எல்.இ.டி. விளக்குகளை ஏற்படுத்துதல், பள்ளத்து பட்டியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பணி தொடங்குதல் போன்ற 28 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • காரைக்குடியில் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

    காரைக்குடி

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடத்தி வரும் ஊழல் எதிர்ப்பு பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை காரைக்குடி அருகே கோவிலூருக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டி.டி.நகரில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழ் மொழியை, அதன் தொன்மையை, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளை உலகெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்கு பெருமை சேர்த்து வருபவர் பிரதமர் மோடி. காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார். செட்டிநாட்டு பகுதியி னருக்கு சொந்தமாக காசி யில் இருந்த இடத்தை அப்போைதய ஆளும் அரசு அபகரித்தது.

    அதனை தற்போதைய பா.ஜ.க. அரசு மீட்டுக்கொடுத்துள்ளது. தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு விற்பனையை அதிகரிக்க பாக்கெட்டு களிலும் மது விற்க முடிவு செய்துள்ளனர்.

    தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனை அடைக்க இனிமேல் கடனே வாங்காமல் இருப்ப தோடு வாங்கிய கடனை வட்டியும், அசலுமாகமாக செலுத்தவே 27 ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை விட, இரு மடங்கு மதுபான தொழிற் சாலை களை நடத்தி வரும் தி.மு.க.வினரும், தரகர்களும் பெறுகின்றனர்.

    தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி களை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பி னர் தேர்ந்தெடு க்கப்பட்டு இத்தொகுதியின் மேம்பாட்டுக்காக குரல் கொடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் சித பழனிசாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜன், மாநில விவசாயிகள் பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை.

    மாவட்ட துணை தலைவர் நாராய ணன், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு குழு உறுப்பினர் காசிராஜா, இதர பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜா சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பி னர் சிதம்பரம்.

    மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் துரை பாண்டியன், மாவட்ட தலைவர் பூப்பாண்டி, காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் அபேஸ் செய்துள்ளனர்.
    • மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    சிவகங்கை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை ராமேசுவ–ரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கினார். நான்காவது நாளான நேற்று முன்தினம் சிவகங்கை நகர் முழுவதும் நடை பயணம் மேற்கொண் டார்.

    அப்போது வீரமாகாளி–யம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற பாதயாத்திரை–யின் போது அங்கு கட்டா–ணிபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் சாலையோ–ரம் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரபுவின் டவுசர் பையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பிளே–டால் கிழித்து அபேஸ் செய் துள்ள–னர்.

    இதுகுறித்து பிரபு சிவ–கங்கை நகர் காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை அருகே உள்ள பாகனேரி புதுவிளக்கு பகு–தியைச் சேர்ந்தவர் முருகே–சன். இவரது மனைவி சுமதி. இவர் மதகுபட்டி பகுதியில் உள்ள கல்லூக்கால் கம்பி தயார் செய்யும் தனியார் கம்பெனி–யில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று அவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர் கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

    இதுபற்றி மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி சப்-இன்ஸ்பெக் டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மேலபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மனைவி லட்சுமி. இவர் கடந்த மூன்று மாதங்களாக தீராத வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப் பட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் அனும–தித்தனர். நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதா–பமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தவமணி கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    ×