என் மலர்
சிவகங்கை
- கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
- குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.
நகர நாகரிகம் என்பதற்கு பல்வேறு கூறுகளை கொண்டு உள்ளது. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர் மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள் போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் அதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்றும் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலான குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறை கிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சங்க காலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர் மேலாண்மை சிறப்பினை இதன் மூலம் அறியலாம்.
இந்நிலையில் கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்பட்டுள்ளது. இது ஆறு உறைகளுடன் காணப்படும், இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் 36 செ.மீ., அகலம் 18 செ.மீ. என்ற முறையில் காணப்படும். தற்பொழுது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளத்தை கொண்டுள்ளது.
இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்த குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளர்.
சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயம் அடைந்த காவலர் மற்றும் குற்றவாளி சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர்.
- சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
- விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாடு முட்டியதில், சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாடுபிடி வீரர் கார்த்திக் உயிரிழப்பை தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.
விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலங்களில் அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.
- மற்றொரு குழியில் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
திருப்புவனம்:
மதுரை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெறுகிறது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தோண்டியபோது, ஒரு குழியில் 2 பெரிய பானைகளின் முகப்புகள் தென்பட்டன. அதன் அருகே பழங்கால தமிழர்கள் மூங்கில் கம்பு ஊன்றி கொட்டகை போட்டு வாழ்ந்ததாகவும், அந்த காலத்திலேயே குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.
தற்சமயம் மணல் அள்ளி அந்த குழிகளையும் கண்டுபிடித்து உள்ளனர். தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு குழியிலும் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு பானை வடிவம் அரை வட்ட வடிவில் நன்றாகவும், மற்றொரு பானை சிதிலமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. அதே குழியில் பண்டைய தமிழர்களின் மூங்கில் மரம் ஊன்றி கொட்டகை போட்டு வசித்ததற்கான குழிகள் நிறைய உள்ளன. தற்போது கீழடியில் 3-வது குழியும் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் எனவும் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தெரிவித்தனர்.
- காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும்.
- ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அத்தொகுதியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி முன்னிலை வகித்தார்.
இதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை கலந்துகொண்டு பேசுகையில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தொடங்கும். காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும். ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டு வரு கின்றனர்.
இதனால் ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-
கூட்டணி கட்சியால்தான் வெற்றி பெற்றோம் என்பதில் என்ற சந்தேகமும் வேண்டாம். அதற்காக நாம் தி.மு.க.விற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். கூட்டணியில் ஜெயித்ததால் நமக்கு பலமில்லை என்று கருதவேண்டாம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பக்கமே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் ஆதரவளித்து வாக்களித்து உள்ளனர்.
40-க்கு 40 வெற்றி பெற தி.மு.க. கூட்டணியில் இருந் ததும் முக்கிய காரணம். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பிறகு 3-வது மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளது. இளைஞர்கள் எல்லாம் இன்றைக்கு புதிதாக வந்த கட்சிகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
அவர்களை தடுத்து நிறுத்தி காங்கிரசை நோக்கி ஈர்க்கும் வகையில் நமது எதிர்கால செயல்பாடுகள் அமைய வேண்டும். இளைஞர்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக் காமல் மற்ற நேரங்களிலும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வு தற்போது தேவையில்லாத ஒன்று. திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம் குறித்து போலீசார் தெளிவுப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது.
கூட்டணி தர்மம் என்பதற்காக நாம் கூனி குறுகி நிற்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் பிரச்சனையை பேச வேண்டும். அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இளைஞர்கள் அக்கட்சிக்கு உணர்வுபூர்வமாக வாக்களிக்கின்றனர். அவர்களை நம் பக்கம் ஈர்க்கும் வகையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறவேண்டும். அதற்காக கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் செல்வப்பெருந்தகையும், கார்த்தி சிதம்பரமும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜான்பாண் டியன் போன்றோர் கூறி வருகின்றனர்.
எங்களை பொருத்தவரையில் தலைவர்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொலைகள் நடக் கின்றன. அ.தி.மு.க. ஆட்சி யில் நடைபெற்ற கொலைகளை எண்ணி பாருங்கள். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்ட நிபுணர்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.
- கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.
திருப்புவனம்:
மதுரை அருகே உள்ள கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த அகழாய்வில் தந்தத்திலான ஆட்டக்காய் ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப் பகுதியையும் கொண்டுள்ளது. 1.5 செ.மீ. விட்டம் கொண்ட தலைப்பகுதியையும், 1.3 செ.மீ. விட்டம் கொண்ட அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.
தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் மூலம் கீழடியில் மேம்பட்ட நாகரிகம் பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்ததற்கு சான்றாக இந்த ஆட்டக்காயை கருதலாம் என தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள்.
- மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
- திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

ரெயில் பெட்டிகள் போன்று வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டியதுடன், வகுப்பறைக்குள் பழமொழிகள், திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டுள்ளன.
சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருக்கும் வகுப்பறைகளில் கல்வி கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸ்காரர் ஜெயராஜ் ஆகியோர் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி சென்றனர்.
திட்டுமலை காளி கோவில் சென்றபோது அங்கு நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை அய்யனார் கோவில் செல்லும் பாதையில் ஓட்டி சென்றனர்.
தொடர்ந்து அவர்களை விரட்டி சென்றபோது வாகனம் செல்ல பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வாகனத்தை கைப்பற்றிய போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பாதரக்குடி அய்ய னார் கோவில் செல்லும் மண் ரோட்டில் தண்ணீர் வழித்தடத்தில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ எடையுள்ள, 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
பின்னர் ஏற்கனவே சந்தேகத்திற்கிடமாக நின்றி ருந்த வாகனம் குறித்து மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மாநகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று இரவு திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் சோதனை நடந்தது.
இதில ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த ஆந்திரா மாநிலம் மக்காவரப்பள்ளம் ஜி நகரம் துர்கா ராவ், அல்லூர் அண்ணாவாடு காலனி சித்தம்பள்ளி சண்டிபாபு, கிழக்கு கோதாவரி வெக்கவ ரம் அபிலேஷ் வர்மா, கிருஷ்ணலங்கா விஜயவாடா சுபாஷ், விசாகப்பட்டினம் பக்கனபாலம் வித்யாசாகர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமி ருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் உள்பட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றி குன்றக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பிடிபட்டவர்களில் வித்யாசாகர் என்பவரின் தந்தை ஆந்திர மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
- மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி கிடைத்து இருக்கிறது.
திருப்புவனம்:
மதுரையை அடுத்த கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் 9 கட்டமாக அகழாய்வு பணிகளை முடித்துள்ளன. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கீழடி, கொந்தகையில் 10-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதில் கீழடியில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே 12 குழிகள் தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழிகளில் ஏற்கனவே பல வண்ண நிறங்களில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. 'தா' என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடும் கண்டெடுக்கப்பட்டது.
குழிகள் மேலும் 3 அடி ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்ட நிலையில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. ஒன்று 5 செ.மீ. நீளமும், 4 செ.மீ. அகலமும் மற்றொன்று 4 செ.மீ. நீளமும், 3 செ.மீ. அகலமும் உள்ளது.
இந்த நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் 10-ம் கட்ட அகழாய்வில் தற்போது உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செம்புப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. pic.twitter.com/XPE9lmwnc7
— Thangam Thenarasu (@TThenarasu) July 3, 2024
- மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
- வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகளில் 2 கிராமம் முதல் 8 கிராம் வரை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கடந்த ஏழு நாட்களாக அடகு வைத்துள்ள நகைகளில் நம்முடைய நகைகளிலும் மோசடி ஏதும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து நகைகளை திருப்பி வருகின்றனர்.
அப்படி வருகை தந்துள்ள நபர்களில் சிலருக்கு மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்சமயம் வங்கி கிளை மேலாளராக இருந்து வருபவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிய மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் போன்ற பொதுமக்கள் பண தேவைக்காக அடகு வைக்கும் தங்க நகைகளை வெட்டியும், பற்றவைத்தும், சுரண்டியும் இருக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.
மேலும் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் எப்படி, யார் மூலம் இவ்வாறான மிகப்பெரிய மோசடிக்கு உட்படுத்தப்படுகிறது? வங்கிக்குள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வங்கி கிளையின் உயர்மட்ட தணிக்கை குழுவும் கடந்த ஏழு நாட்களாக வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் இக்கிளையில் அடகு வைத்திருக்கும் அனைவரும் தங்களது நகைகளை திருப்புவதற்காக மணிக்கணக்கில் நாள்தோறும் காத்துக் கிடந்து திருப்பி வருகின்றனர்.
நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் வங்கியின் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
- அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.
- பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கி மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.
வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது 4 கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வங்கிக் கிளையில் சென்று கேட்ட போது, பணியில் இருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் யாரும் சரிவர பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளர் அந்த வங்கிக் கிளையின் நகைகள் அடகு வைத்த தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த வங்கிக் கிளையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் வாடிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நகையை அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த ஒரு வருட காலமாக இது போன்று அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நகைகளை வைக்கும் போது வங்கியில் தரப்படும் கணக்கு சான்று அட்டையிலும் மோசடியாக ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை வெள்ளை மை கொண்டு அழித்து புதிதாக எடை எழுதி தரப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
வங்கிகளில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் அனைவரது நகைகளிலும் எடை குறைந்து காணப்படுவதால் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வங்கி கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், போலீசில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாடிக்கையாளர் களுக்கு எந்த விதமான நஷ்டமும் இன்றி அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை வாடிக்கையாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.






