என் மலர்tooltip icon

    சேலம்

    • உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
    • விண்ணப்பதாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    சேலம்:

    கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள். அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சிக்கான நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு-2023 அறிவிப்பு இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    தமிழ்நாட்டில் இந்த தேர்வு அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, ேகாவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருது நகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இந்த மையங்களில் வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ண ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.1150, ஓபிசி., பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.325 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    • யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர்.
    • காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் அவ்வை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 27). இவரது நண்பர் பிரபாகரன் (25).

    ரவுடிகளான இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி (50) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரவியிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், ரவியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை பார்த்த ரவியின் உறவினர்கள் மற்றும் அவரது 3 மகன்களும் சேர்ந்து யோகேஸ்வரன் மற்றும் பிரபாகரனை சரமாரியாக தாக்கினர். செங்கலால் தாக்கப்பட்ட யோகேஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    தொடர்ந்து ரவியின் உறவினர்கள், அவரை தாக்கியதால் யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரவியின் உறவினர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    இறந்தவரின் உறவினர்கள் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். யோகேஸ்வரன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யோகேஸ்வரனை தாக்கியதாக ரவியின் மகன்கள் 3 பேர் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த புத்தாண்டு அன்று அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரபாகரன் தான் ஜெயிலுக்கு செல்ல ரவி தான் காரணம் என நினைத்து அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ரவியை பழிவாங்க வேண்டும் என்று கருதிய பிரபாகரன், நேற்று நண்பர் யோகேஸ்வரனுடன் அரிசிபாளையம் வந்த நிலையில் அங்கு ரவியின் உறவினர்கள் தாக்கியதில் யோகேஸ்வரன் இறந்ததும் பிரபாகரன் காயம் அடைந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார்.
    • ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.

    ஏற்காடு:

    சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் திரும்பி கொண்டிருந்தார்.

    ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை, நடைபயிற்சிக்கு வந்த சிலர், ரமேஷை பார்த்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரமேஷை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன.
    • கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சேலம்:

    சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவின்போது 2 நாட்கள் தேரோட்டம் நடத்தப்படும். முதல் நாளில் சுகவனேஸ்வரர் தேரும், 2-வது நாளில் பெருமாள் தேரும் வலம் வரும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா 2 கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.

    சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் போற்றப்பட்ட சுகனவனேஸ்வரர் கோவில், அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடப்பட்ட தலமாகும். இந்த கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த ரதவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 25-ந்தேதி கொடியேற்றமும், தொடர்ந்து காலை மாலை சாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள்கிறார். பின்பு 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். 5 ஆண்டுக்கு பின்னர் இந்த தேரோட்டம் நடப்பதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில் வைகாசி விசாக உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தேர்வீதிக்கு சாமி எழுந்தருள்கிறார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடக்கிறது. பின்பு தேரோட்டம் தொடங்குகிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ராஜகணபதி கோவில் பகுதியிலிருந்து புறப்படும் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ராஜகணபதி கோவில் அருகே நிலை சேர்கிறது.

    அடுத்தடுத்து 2 நாட்கள் தேரோட்டம் நிகழ்வதால் சேலம் மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது. 2 கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. தற்காலிக கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன. 2 தேர்களையும் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு சேலம் கடைவீதி தேரடியில் தொடங்கி ஆனந்தா இறக்கம், லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், 2-வது அக்ரஹாரம், வரதராஜபெருமாள் கோவில்(பட்டைக்கோயில் ), சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் இறக்கம், முதல் அக்ரஹாரம் மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் 2, 3-ந்தேதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்த்திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி 129 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படு வதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண் டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலா என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.
    • ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் தேரோட்டம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது.

    விழாவையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வராயப்பெருமாள், காவிரியம்மாள் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டம் நடந்தது. தேரை ஏற்காடு எம்.எல்.ஏ சித்ரா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னவெள்ளை கோகிலா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பு வெங்கடாஜலம், மஞ்சுளா ராமசந்திரன், செந்தில் பிரபு, தனலட்சுமி சின்னசாமி, ராஜேந்திரன், சிவசக்தி ரவிசந்திரன் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், மலை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் ஏற்காட்டை சுற்றியுள்ள 72 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபாடு நடத்தினர். தேர் வரும் வழியில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
    • மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த தி.மு.க. ஆட்சியில் தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    சர்க்கரையை எரும்புதின்றது. சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல் மூட்டைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    மக்கள் வரிப்பணத்தில் உல்லாச பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.
    • 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    சேலம்:

    தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்கீழ் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. இந்த 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1830 இடங்களுக்கு நடப்பாண்டு 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் மாணவர் சேர்க்கை கையேடு ஆகியவை www.scert.tn.schools.gov.in என்ற இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2,300 இடங்கள்

    அதே சமயம் கடந்த ஆண்டு 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை செய்த நிறுவனங்களை தவிர்த்து, 33 உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,300 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செய்ய தகுதியுள்ளது. வருகிற 5-ந்தேதி இந்த நிறுவனங்களின் இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவுறுத் தியுள்ளார்.

    • மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவுசிகாஸ்ரீ ( வயது 4).
    • விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது டீ எதிர்பாராத விதமாக கொட்டியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவுசிகாஸ்ரீ ( வயது 4). நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் டீ போட்டு குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது டீ எதிர்பாராத விதமாக கொட்டியது. இதனால் சூடு தாங்காமல் சிறுமி வலியால் அலறி துடித்தாள். படுகாயமடைந்த சிறுமியை மீட்ட குடும்பத்தி னர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
    • இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சேலம்:

    ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது. விழா வில், சுற்றுலா துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, மீன்வ ளத்துறை உள்பட 42 துறைகள் சார்பில் அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஏற்காடு பூங்காவில் 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    நேற்று முன்தினம் (28-ந்தேதி) வரை ஒரு வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விழாவில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து, குடும்பத்துடன் ஏற்காட்டுக்கு வருகின்றனர்.

    கோடை விழாவிற்காக பூங்காவில் பல்வேறு பூக்களால் வடி வமைக்கப்பட்ட டிராகன் உருவம், பொன்னியின் செல்வன் கப்பல், முயல் உருவம், மலர் படுக்கை, மலர் வளையங்கள், செல்பி பாய்ண்ட், சங்க கால மலர்கள், குடில்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் பிரிக்கப்படாமல் அப்ப டியே உள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஏற்காடு ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்கின்றனர். இன்று வேலை நாள் என்ற போதி லும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். இதனால் ஏற்காடு சுற்றுலா தலம் களை கட்டியது.

    • ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
    • இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    சேலம்:

    இந்திய அரசு பாதுகாப்பு துறையில் உள்ள முப்படை களான ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படு கின்றனர்.

    அதன்படி இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    1.365 இடங்கள்

    இந்த தேர்வுக்கு திரு மணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1,365 இடங்கள் உள்ளன.

    கல்வி தகுதி கணிதம், இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் 01.11.2002- 30.04.2006 -க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.06.2023 ஆகும்.

    விண்ணப்ப கட்டணம், ஜி.எஸ்.டி., வரி என ரூ.649 செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோ தனை உள்ளிட்ட தேர்வுகள் அடிப்படையில் பணி யமர்த்தப்படுவார்கள்.

    இந்த தகவலை இந்திய கப்பல்படை தெரிவித்துள்ளது.

    • மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது.
    • சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    சேலம்:

    சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி அமைப்பு ஆகியவை சார்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதியில் ஆண்கள் பிரிவில் ஏ.வி.எஸ். கல்லூரி அணி முதல் இடத்தை வென்றது. வி.வி.சி. அணி 2-வது இடமும், சாய்டிரைலர்ஸ் அணி 3-வது இடமும், ஓமலூர் கொங்குபட்டி அணி 4-வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி வென்றது. சக்தி கைலாஷ் கல்லூரி அணி 2-வது இடத்தையும், ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி 3-வது இடத்தையும், சென்னை மினிஸ்போர்ட்ஸ் அணி 4-வது இடத்தையும் பெற்றன.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.

    ×