என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்
- ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
- இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சேலம்:
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது. விழா வில், சுற்றுலா துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, மீன்வ ளத்துறை உள்பட 42 துறைகள் சார்பில் அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஏற்காடு பூங்காவில் 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் (28-ந்தேதி) வரை ஒரு வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விழாவில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து, குடும்பத்துடன் ஏற்காட்டுக்கு வருகின்றனர்.
கோடை விழாவிற்காக பூங்காவில் பல்வேறு பூக்களால் வடி வமைக்கப்பட்ட டிராகன் உருவம், பொன்னியின் செல்வன் கப்பல், முயல் உருவம், மலர் படுக்கை, மலர் வளையங்கள், செல்பி பாய்ண்ட், சங்க கால மலர்கள், குடில்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் பிரிக்கப்படாமல் அப்ப டியே உள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஏற்காடு ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்கின்றனர். இன்று வேலை நாள் என்ற போதி லும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். இதனால் ஏற்காடு சுற்றுலா தலம் களை கட்டியது.