என் மலர்
நீங்கள் தேடியது "உதவிப் பேராசிரியர்"
- உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
- விண்ணப்பதாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம்:
கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள். அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சிக்கான நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு-2023 அறிவிப்பு இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் இந்த தேர்வு அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, ேகாவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருது நகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இந்த மையங்களில் வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ண ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.1150, ஓபிசி., பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.325 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
- விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025, நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






