என் மலர்
நீங்கள் தேடியது "Deadline extended"
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மூவர் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹிமன்சு சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர்.
இந்த குழு, விசாரணை துவங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மணிப்பூரில் வன்முறை தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகியும், அவ்வப்போது சிறிய அளவிலான மோதல்கள் நீடித்து வருகின்றன. இத்தகைய சூழலில், இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை மிக முக்கியமானது. இது வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துளு்ளது.
மேலும் அந்த அறிக்கை 20.05.2026-க்கு மிகாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்டட்டுள்ளது.

- பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை.
- மத்திய அரசு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்துள்ளது.
திருப்பூர் :
தமிழக விவசாயிகள் தற்போது பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் ராபி கால நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, அவகாசம் முடிந்த நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை. எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை இணை செயலாளருக்கு, தமிழக வேளாண்துறை கமிஷனர் கடிதம் அனுப்பினார்.
இதை ஏற்று, மத்திய அரசு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் பொது சேவை மையங்களில் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்.இந்த தகவலை திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
- நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இரவுடன் நிறைவு பெற இருந்தது.
இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.
- விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
- விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025, நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






