என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாநகராட்சி 57-வது டிவிசனுக்கு உட்பட்ட களரம்பட்டி முதல் ஸ்ரீராம் நகர் வரை புலிகார தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • மழை பெய்தால் சாலைகளில் மழைநீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். அப்போது மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 57-வது டிவிசனுக்கு உட்பட்ட களரம்பட்டி முதல் ஸ்ரீராம் நகர் வரை புலிகார தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 20 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியு மாக காணப்படுகிறது.

    சாக்கடை வசதிகள் இல்லை. மழைகாலங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பெய்தால் சாலைகளில் மழைநீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். அப்போது மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மக்கள் அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. இது சம்மந்தமாக பல்வேறு மறியல் போராட் டங்கள் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் இரண்டு மாதத்தில் சாலை, சாக்கடை வசதி செய்து தருவதாக கூறி சென்றனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து புலிகார தெருவில் பொது மக்கள் கருப்புக்கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை போலீசாரும், அதிகாரி களும் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அம்மாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த மாணவிகள் பலர் படிக்கின்றனர்.
    • மாணவி கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு பயன்படுத்தும் சைக்கிள்களை நிறுத்து வதற்கு, பள்ளி வளாகத்தில் இடம் இல்லாததால், பள்ளிக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாப் பேட்டையில், சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த மாணவிகள் பலர் படிக்கின்றனர். மாண விகள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு வசதியாக, தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் மாணவிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.

    இதனைப் பயன்படுத்தி அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து மாணவிகள், தினமும் பள்ளிக்கு வந்த செல்கின்றனர்.

    இந்நிலையில், மாணவி கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு பயன்படுத்தும் சைக்கிள்களை நிறுத்து வதற்கு, பள்ளி வளாகத்தில் இடம் இல்லாததால், பள்ளிக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் மாணவிகள் தங்களது சைக்கிள்களை நிறுத்திவிட்டு தினமும் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், திறந்தவெளியில் நிறுத்தப்படுவதால், சைக்கிள்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. எனவே, சைக்கிள் நிறுத்துமிடம் அமைப்பதற்கு, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக, அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப் பட்டுள்ளன.

    ஆனால், அவற்றை நிறுத்தி வைக்க பள்ளியில பாதுகாப்பான இடம் இல்லாமல் பள்ளிக்கு வெளியே திறந்தவெளியில் நிறுத்த வேண்டிய அவலம் நீடிக்கிறது. இதானல், நாள் முழுவதும் வெயிலிலேயே சைக்கிள்கள் நிற்க வேண்டி யதாகிறது. இதேபோல், மழைக்காலத்தில் சைக்கிள்கள் மழையில் நனைவதும் தொடர்கிறது.

    இதனால், சைக்கிள்கள் துருப்பிடித்தல், சக்கரத்தில் உள்ள டயர், டியூப் ஆகி யவை சேதமடைவது, அடிக்கடி பழுதடைவது ஆகியவை நிகழ்கின்றன.

    அடிக்கடி செலவு செய்து, சைக்கிளை சீரமைக்க வேண்டியுள்ளது. ஏழை மாணவிகளால், சைக்கிளுக்கு அடிக்கடி செலவு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், ஓராண்டுக்குள்ளாகவே சைக்கிள்களை பயன்படுத் முடியாத நிலை ஏற்பட்டு, மாணவிகள் அவதியடை கின்றனர். எனவே, மாணவி களின் சைக்கிள்களை பள்ளியில் பாதுகாப்பாக நிறுத்த நிழற்கூடம் அமைக்க பள்ளி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி என்ற மனைவி உள்ளார்.
    • அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி (வயது 37) என்ற மனைவி உள்ளார். அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவரை, நளினி கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் நளினிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனது கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அய்யாச்சாமி, நளினியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியாக இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நளினியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.

    சேலம்:

    சேலம் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அருள். இவர் கோரிமேட்டில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் பாதையில் மரம் அறுக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் மில்லில் விளக்கு போடுவதற்காக அருள் அங்கு வந்தார்.

    இந்த நிலையில் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஞ்சித்குமார் (வயது 45) தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அங்கு பிண மாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அருள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சித்குமார் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கோரிமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.

    விசாரணையில் ரஞ்சித்குமார், அவரது நண்பர் கொல்லப்பட்டியை சேர்ந்த கோகுல்நாத் (30), கோபிநாதன் ( 33) ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதும்அ வர்கள் தான் ரஞ்சித்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறை வான 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோகுல்நாத் மாமியார் ரஞ்சித்குமாரிடம் பணம் வாங்கியதாக கூறப் படுகிறது. அந்த பணத்தை கோகுல் நாத்திடம் உடன டியாக வாங்கி கொடுக்க தருமாறு மாமியார் கூறி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. கோகுல்நாத் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    • பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
    • இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றி லைக்கு மாறு கொள்வோம் என்றார் பாரதியார். காவிரிக்கரையில் விளையும் வெற்றிலைக்கு என்றுமே மவுசு உண்டு.

    பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அங்கு வெற்றிலை முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வதால் வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வார்கள். வெற்றிலை என்ற பெயருக்கு முக்கிய காரணம் உள்ளது. வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும்.

    இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.

    வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் 2 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் 3 வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம்.

    வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை. அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள்.

    இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகோலாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம்.

    ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

    வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலைக்கு தனி மவுசு உண்டு. பரமத்திவேலூர், நன்செய் இடை யாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளை யம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக் கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை பயிர் செய்துள்ளனர். காவிரி ஆற்றின் நேரடி பாசனத்தால் வளர்வதால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் வதங்காமல் அப்படியே இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வெற்றிலைக்கு தனி சிறப்புகள் உண்டு.

    வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசே ஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம்என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பல வற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகுமாம். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

    வெறும் வாயில் வெற்றிலை மென்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கும். தொடர்ந்து தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் குடல் புண்வாய், புண்கள் ஆறிவிடும். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் வெற்றி லையை அரைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு வெற்றி லையை வைத்து தேய்த்தால் போதும் முகப்பரு போய்விடும். உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் அடித்தால் தண்ணீரில் வெற்றிலையை போட்டு காயவைத்து சுடு தண்ணீராக குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் வெற்றிலை தின்றால் பால் அதிகமாக சுரக்கும். வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலையே அதிகம் பயன்படுத்தப்படு கிறது. சங்க கால நூல்களான பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமா யணம் உட்பட பல்வேறு நூல்களில் வெற்றி லையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் கொண்ட காவிரிக் கரை வெற்றிலை நம் வாழ்வின் அங்கமாக உள்ளது.

    வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து – 90 சதவீதம், புரதச்சத்து – சதவீதம், கொழுப்புச்சத்து – சதவீதம், தாது உப்பு – சதவீதம், நார்ச்சத்து – சதவீதம், பச்சையம் – 0.25சதவீதம், மாவுச்சத்து – 6.10 சதவீதம், நிகோடினிக் அமிலம் – 0.89 மி.கி, வைட்டமின் சி – 0.01, வைட்டமின் ஏ – 2.9 மி.கி., தயாமின் – 10 கி, ரிபோப்ளேவின் –, நைட்ரஜன் – 7.0சதவீதம், பாஸ்பரஸ் – 0.6சதவீதம், பொட்டாசியம் – 4.6 சதவீதம், கால்சியம் – 0.2 சதவீதம், சத்தூட்டம் –

    44 கலோரி, இரும்புச்சத்து – 0.007சதவீதம்.

    • வீட்டின் அருகே சென்றபோது, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.
    • சேலம் மாநகர் முழுவதுமாக தீவிரமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் சிவதாபுரத்தில் வெள்ளி நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு சுரேஷ், அவரது மனைவி விசாலாட்சியும், வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் 8 கிலோ வெள்ளியை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், காட்டூரில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்றபோது, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.

    மேலும் சுரேஷ் மற்றும் விசாலாட்சியை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டனர். கீழே விழுந்ததில் சுரேஷ் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் சுரேஷின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் மாநகர தெற்கு துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற துணை கமிஷனர் லாவண்யா சுரேஷிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு சேலம் மாநகர் முழுவதுமாக தீவிரமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் 4 கொள்ளை கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    • பருவம் தவறிய மழையால் தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்தல், அழுகல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
    • கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இதைத்தவிர மாவட்டத்தில் தினசரி காய்கறி சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பருவம் தவறிய மழையால் தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்தல், அழுகல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மேச்சேரி தக்காளி பிரசித்தி பெற்றதாகும். இந்த தக்காளி செடிகள் மேச்சேரி, காடையாம்பட்டி ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தக்காளி பயிர் அழுகி விட்டது. தற்போது விவசாயிகள் புதிதாக தக்காளி செடி பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து கடந்த வாரம் 10 முதல் 15 லோடு தக்காளி வந்த நிலையில் தற்போது 5 லோடு வரை மட்டுமே வரத்து உள்ளது, என்றனர்.

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.

    அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 121 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 117 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    • அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியேற்றினார்.

    இதையடுத்து நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மேட்டூர் அணையை அ.தி.மு.க. அரசுதான் தூர்வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தது.

    அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கதது. தி.மு.க. அரசு பல பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விடுபட்ட அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கவும், தமிழகம் முழுவதும் ஏழை முதியோர்களை கண்டறிந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதற்கு முன்பு 3 அமைச்சர்கள் குறித்து குற்றச்சாட்டு எழுந்தபோது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் செந்தில் பாலாஜியை ஏன் பதவியில் இருந்து விடுவிப்பதற்கு முதலமைச்சர் தயக்கம் காட்டுகிறார். ஏனென்றால் அவர் வாயை திறந்தால் ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துவிடும். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் கைதியாக அறிவிக்கப்பட்டவரை காப்பாற்ற நினைக்கிறார்.

    தற்போது ரேஷன் கடையிலும் முறைகேடுகள் நடக்கிறது. ஊழலுக்கு சம்மட்டி அடி கொடுக்க வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

    • சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் காட்டுக்கோட்டை உள்ளது.
    • இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன.

    சேலம்:

    சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் காட்டுக்கோட்டை உள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன. புறவழிச்சாலையில் எந்த பஸ்களும் நின்று செல்வது இல்லை. எனவே காட்டுக்கோட்டையில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி நேற்று பொதுமக்கள் புறவழிச்சாலை நுழைவு வாயிலில் உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ்கள் நின்று செல்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

    • கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
    • இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் முறையிட்ட மக்கள், தடுப்பணையை தரமானதாக கட்டும்படி வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தடுப்பணையை தரமான தாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத் தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    அதன்பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி ஜவஹர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    மலர்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர் களுக்கும், அ.வாழப்பாடி கரக்காரர் குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்

    பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    ×