என் மலர்tooltip icon

    சேலம்

    • 65 வயது தக்க ஆண் ஒருவர் சாலை யோரம் மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் இறந்தார்.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள ஆணை கவுண்டம்பட்டி, பகுதியில் சுமார் 65 வயது தக்க ஆண் ஒருவர் சாலை யோரம் மயங்கி கிடந்தார். அவருக்கு முகம், தலை, கைகளில் காயங்கள் காணப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மோகன், சம்பவ இடத்திற்கு சென்று 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர் ஆம்புலன்ஸில் மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செய்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் இறந்தார்.

    இதுகுறித்து கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பழனிசாமி, வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர்? அடையாளம் தெரி யாத வா கனம் மோதியதில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள். இறந்து போன முதியவர் உடல் சேலம் அரசு மருத்து வமனையில் வைக்கப்பட் டுள்ளது.

    அவரைப் பற்றி ஏதேனும் விவரம் தெரிந்தால் கருப்பூர் காவல் நிலையத்தில் தகவல் சொல்லலாம் என போலீ சார் தெரிவித்துள்ளனர்.

    • சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது.
    • தற்காலிக விடைகள் என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டபடிப்புகளில் மாணவர்கள் சேர ஒவ்ெவாரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (இளநிலை) மத்திய கல்வித்துறை அமைச்ச கத்தின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படு கிறது.

    நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் எழுதினர்.

    சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

    பொதுபல்கலைக்கழக நுழைவு தேர்வு (கியூட்) இளநிலை படிப்புக்கான தற்போது, தற்காலிக விடைகள் என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

    மொழி தேர்வு, கணிதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், வேதியியல், இயற்பியல், பைன் ஆர்ட்ஸ், வீட்டு அறிவியல், கணினி அறிவியல், கணக்கியல், கலை ஆர்ட்ஸ், மானுடவியல், உயிரியல், வேளாண்மை, உடற்கல்வி, சட்ட படிப்பு, மாஸ் மீடியா, சமூகவியல், வணிக படிப்பு, பொறியியல் வரைகலை, தொழில்முனைவு, உளவியல், கற்பித்தல் திறன் உள்பட அனைத்து படிப்புகளுக்குமான விடை குறிப்புகள் 704 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. தேர்வின்போது ஒவ்வொரு கேள்விக்கும் மாணவர்கள் எழுதிய விடைகள் இதில் சரிபார்த்து கொள்ளலாம்.

    • பெரும்பாலான பள்ளி களில் தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
    • முன்னாள் மாணவர்களில் குறைந்தபட்சம் 25 பேரை மன்றத்தில் இணைக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர் நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    2 ஆண்டுகளாக...

    தமிழகத்தில் 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மன்றம் அமைக்கவும், அதன்மூலம் பல்வேறு பள்ளி வளர்ச்சி பணிகளை மேற்ெகாள்ள வும் அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், பெரும்பாலான பள்ளி களில் தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

    இவற்றை முழுமையாக செயல்படுத்துவது குறித்து கடந்த மே மாதத்தில் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

    இந்த நிலையில் ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நீண்ட காலமாக பணிபுரியும் ஆசிரியர், தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண் குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் மூலம் ஆர்வம் கொண்ட முன்னாள் மாணவர்களில் குறைந்தபட்சம் 25 பேரை மன்றத்தில் இணைக்க வேண்டும்.

    வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதிக்குள் முன்னாள் மாணவர் மன்றம் அமைத்து அதன் உறுப்பினர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    வளர்ச்சி பணி

    கல்வி தகுதியை கருத்தில் கொள்ளாமல் பள்ளியில் படித்திருந்து வளர்ச்சி பணிகளில் ஆர்வம் காட்டும் அனைவரையும் சேர்க்கலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவர்னர் சேலம் வருவதை கண்டித்து பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
    • பல்கலைக்கழகம் மாணவர் கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர்ஆர் என் ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

    முன்னதாக கவர்னர் சேலம் வருவதை கண்டித்து பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவ தாக அறிவித்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவின் போது மாண வர்கள் கருப்பு சட்டை அணிந்து வர தடை விதிக்கப்ப டுவதாக சுற்ற றிக்கை வெளியிட்டது.

    காவல்துறை அறிவுறுத்த லின்பேரில் இந்த நடவ டிக்கை எடுக்கப்படுவ தாக அதில் கூறப்பட்டிருந்தது. அதேவேளையில் கறுப்பு உடை அணியக்கூடாது என்று கூறவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் மாணவர் கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என விதித்த தடையை வாபஸ் பெற்றது. இந்த நிலையில் விழா நடந்து முடிந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தினர் மாநகர காவல் துறையில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

    புகாரில் காவல் துறை மேல் பழி போட்டு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என மாணவர்க ளுக்கு அறிவு றுத்திய பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்

    அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள், வார விடுமுறை, பண்டிகை நாட்களில் ஏற்காட்டுக்கு அதிகப்படி யான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். குடும்பத்துடன் காட்டேஜ், ஓட்டல், விடுதி களில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான்பூங்கா உள்ளிட்ட வற்றை சுற்றிப் பார்த்து செல்கின்றனர். மேலும், ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ்சீட் காட்சி முனையம் போன்ற இடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர்.

    பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், கடைகளில் வியாபாரம் களை கட்டியது. சாலை யோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது.அதே சமயம் ஏற்காட்டில் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால், மலைப்பாதையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கொண்டை ஊசி வளைவுகளில் பனி மூட்டமும் சூழ்ந்தது.நண்பகல் வேளையில் படகு இல்லம் மற்றும் ஏரி பகுதி, ஒண்டிக்கடை

    ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலை தெரியாத அளவிற்கு பனிமூட்டம் படர்ந்திருந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    ஏற்காட்டில் நிலவிய இந்த இதமான சீதோஷண நிலையால் சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சிய டைந்தனர். இதேபோல், அருகில் உள்ள வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். 

    • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.
    • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.

    சேலம்:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), மல்டி டாஸ்கிங் (தொழில் நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ெஹவில்தார் பணிகளுக்கான தேர்வு- 2022 அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து தேர்வு நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், சேலம், நாமக்கல்லை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதினர். விண்ணப்பதாரர்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் கேள்விக்கான அதிகாரபூர்வ விடைகள் தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம். இந்த வசதி அடுத்த மாதம் 4-ந்தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காலக்கெடு கிடையாது.

    தேர்வாணைய இணையதளத்தில் உள்ள இவற்றின் லிங்க் வசதியை பயன்படுத்தி விண்ணப்ப தாரர்கள் தங்களுக்குரிய பதிலளிப்புத் தாள்களுடன் தற்காலிக விடை குறிப்புகளை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

    • கவர்னர் சேலம் வருவதை கண்டித்து பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
    • கறுப்பு உடை அணியக்கூடாது என்று கூறவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

    முன்னதாக கவர்னர் சேலம் வருவதை கண்டித்து பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக சுற்றறிக்கை வெளியிட்டது.

    காவல்துறை அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதேவேளையில் கறுப்பு உடை அணியக்கூடாது என்று கூறவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என விதித்த தடையை வாபஸ் பெற்றது. விழா நடந்து முடிந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தினர் மாநகர காவல் துறையில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

    புகாரில் காவல்துறை மேல் பழி போட்டு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்திய பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • நேற்று 91.43 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 90.45 அடியாக குறைந்துள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் 800 கன அடியாக நீர்வரத்து வருகிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று 121 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 145 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 91.43 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 90.45 அடியாக குறைந்துள்ளது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தொடர்ந்து ஆடிய மதுரை 108 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 18.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.

    மதுரை சார்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 11 ரன்னும், ஜெகதீசன் கவுசிக் 19 ரன்னும் எடுத்தனர். சுரேஷ் லோகேஷ்வர் நிதானமாக ஆடி 32 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், மதுரை அணி 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வென்றது. ஸ்வப்னில் சிங் 25 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது மதுரை அணி பெற்ற 3வது வெற்றி ஆகும்.

    • திருச்சி அணியில் அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.
    • மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சேலம்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.

    பிரான்சிஸ் 18 ரன்கள், டேரில் பெராரியோ 21 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீர்ர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    • வேளாண்மை சம்பந்தமான தங்களது குறை களை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித் துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்களது குறை களை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்

    துள்ளார்.

    • புள்ளியியல் நிபுணர் பேராசிரியர். பி.சி. மஹாலனோபிஸின் பிறந்த நாளான இன்று ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் தேசிய புள்ளியியல் தினத்தைக் கொண்டாடுகிறது.
    • சேலம் மற்றும் தர்மபுரி துணை மண்டல அலுவலக புள்ளியியல் துறை ஊழியர்கள் மேலும் புள்ளியியல் துறை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    புள்ளியியல் நிபுணர் பேராசிரியர். பி.சி. மஹாலனோபிஸின் பிறந்த நாளான இன்று(ஜூன் 29-ந்தேதி) புள்ளிவிவரங்கள் குறித்த மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவற்றைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் தேசிய புள்ளியியல் தினத்தைக் கொண்டாடுகிறது.

    இந்த ஆண்டு "நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கான தேசிய கட்டமைப்புடன் மாநில கட்டமைப்பை சீரமைத்தல் என்பது குறித்து கோவை மண்டல இயக்குனர் விபீஷ் ஆலோசனையின்படி,

    சேலம் சொர்ணபுரியில் உள்ள தேசிய புள்ளியியல் துணை மண்டல அலுவலகம் சார்பில், தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது.

    சேலம் புள்ளியியல் அலுவலர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் சேலம் மற்றும் தர்மபுரி துணை மண்டல அலுவலக புள்ளியியல் துறை ஊழியர்கள் மேலும் புள்ளியியல் துறை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சாரதா மகளிர் கல்லூரியின் புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர்.வி.நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தருமபுரி துணை மண்டல அலுவலக மூத்த புள்ளியியல் அதிகாரி சின்னதுரை உள்பட் அபலர் கலந்துகொண்டார்கள்.

    ×