என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பஸ் கண்ணாடி"
- விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
மயிலாடுதுறையிலிருந்து சேலம் நோக்கி நேற்றிரவு 2 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஆலயமணி இயக்கி சென்றுள்ளார். விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் அருகே பேருந்து வந்த போது, அங்கு நடந்துச்சென்று கொண்டிருந்த 3 போதை ஆசாமிகள் பஸ்சினை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் போதை ஆசாமிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் கண்ணாடி மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றனர். இதனால் பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். அதன்படி மணவாள நல்லூரை சேர்ந்த அன்புச்செல்வன் என்ற மூசா (வயது 20), சரவணன் என்ற அப்பு (20) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி உஸ்தலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவர் அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சை பழையபேட்டை பகுதியில் இருந்து 5ரோடு பகுதிக்கு சென்றார். அப்போது பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இதனை தட்டி கேட்ட கிருஷ்ணமூர்த்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அரசு பஸ்சின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அதேபகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்கிற சுக்கு என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர்.
- பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி என்பவரை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வலசையூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த 28-ந் தேதி பெரிய வீராணம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடினர். இது குறித்து அரசு பஸ் கண்டக்டர் வீராணம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி (வயது 18) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைதான பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, வாய்க்கால் பட்டறை பகுதியில் பஸ்சில் ஏறிய போது அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர், தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பஸ் மீது கல்வீசியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
சமீபத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு பஸ் புறப்பட்ட சில நேரத்தில் வளைவில் திரும்பும் போது பஸ்சின் இருக்கை கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று இயங்கி வருகிறது. ஆம், வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடி இன்றி முழுவதுமாக திறந்த நிலையில் பஸ் புறப்பட்டது. வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால் வெளியில் வீசும் குளிர்காற்று பஸ்சின் உள்ளே தான் முழுவதுமாக வீசுகிறது. இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி பஸ் சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்த சில நாட்களுக்குள் நாகையில் பின்பக்க கண்ணாடி இன்றி அரசு பஸ் இயங்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.






