search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt bus glass"

    • பல்லடம் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தவுடன் தூக்கம் கலைந்து திடீரென எழுந்தார்.
    • நடத்துனர் நாகராஜ், வேல்முருகனிடம் கேட்டபோது அவர் தெரியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்ஸை சம்பத்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். நாகராஜ் நடத்துனராக இருந்தார். இந்த நிலையில் அந்த பஸ்சில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற பெயிண்டர் பயணம் செய்தார். குடிபோதையில் தூங்கிய நிலையில் வந்தார்.பல்லடம் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தவுடன் தூக்கம் கலைந்து திடீரென எழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி காணவில்லை என்று கூறப்படுகிறது.

    தேடிப் பார்த்த அவர் கண்ணாடி கிடைக்காததால், ஆத்திரத்தில் பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் வேல்முருகனின் கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து நடத்துனர் நாகராஜ், வேல்முருகனிடம் கேட்டபோது அவர் தெரியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பஸ் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது. போலீசார் விசாரணை செய்தனர். சேதமான கண்ணாடிக்கு இழப்பீடாக ரூ.500 வேல்முருகனிடம் வசூலிக்கப்பட்டது. பின்னர் போலீசார் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    மயிலாடுதுறையிலிருந்து சேலம் நோக்கி நேற்றிரவு 2 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஆலயமணி இயக்கி சென்றுள்ளார். விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் அருகே பேருந்து வந்த போது, அங்கு நடந்துச்சென்று கொண்டிருந்த 3 போதை ஆசாமிகள் பஸ்சினை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் போதை ஆசாமிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் கண்ணாடி மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றனர். இதனால் பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். அதன்படி மணவாள நல்லூரை சேர்ந்த அன்புச்செல்வன் என்ற மூசா (வயது 20), சரவணன் என்ற அப்பு (20) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×