search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணை பூங்காவை ஒரே நாளில் 7513 பேர் பார்வையிட்டனர்
    X

    மேட்டூர் அணை பூங்காவை ஒரே நாளில் 7513 பேர் பார்வையிட்டனர்

    • சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர்.
    • காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர். நேர்த்தி கடனை நிறைவேற்ற ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    மீன்களை வாங்கி சுவைத்தும், அண்ணா பூங்காவிற்கு சென்று ஊஞ்ச லாடியும், சறுக்கு விளையாடி யும் மகிழ்ந்தனர். சிறிய வர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லா மல் விளையாடி மகிழ்ந்தனர்.

    மான், முயல்கள், பாம்புகள் மற்றும் மீன்காட்சி சாலையும் பார்த்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 7513 சுற்றுலா பணிகள் வந்து சென்றனர்.

    இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 37 ஆயிரத்து 565 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா நினைவு கோபுரத்தை 772 சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.3860 வசூல் ஆனது.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழக மற்றும் அண்டை மாநிலங்க ளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    பக்ரீத் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாளான கடந்த 4 நாட்களாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தி ருந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட், சேர்வரா யன் குகை கோவில், லேடிஸ் சீட், ஜெண்ட் சீட் என அனைத்து பகுதிகளிலும் குடும்பத்து டன் பார்த்து மகிழ்ந்தனர்.

    மேலும் படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்தி ருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த தால் ஏற்காடு மலை பாதை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×