என் மலர்tooltip icon

    சேலம்

    • 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியி டங்கள் மற்றும் தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் நேற்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு
    • புறநகர் பகுதியில் 5 ஆயிரத்து 892 பேர் தேர்வு எழுதினர்

    சேலம்

    தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியி டங்கள் மற்றும் தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் நேற்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 10 மையங்க ளில் நடந்தது. தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 564 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இதில் சேலம் மாநகரில் 2 ஆயிரத்து 30 பேர் தேர்வு எழுதினர். 359 பேர் தேர்வு எழுத வர வில்லை. இதேபோல் சேலம் புறநகர் பகுதியில் 5 ஆயிரத்து 892 பேர் தேர்வு எழுதினர். 1283 பேர் தேர்வு எழுத வர வில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.

    தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் பலத்த பாதுகாப்புடன் சேலம் ஆயுதப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்டிராங் அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது.

    போலீசாருக்கு தேர்வு

    இதே போல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு காவல் துறையில் பணி யாற்றி வரும் போலீசாருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அந்த வகையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையில் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆண் போலீசார் 1049 பேரும், பெண் போலீசார் 274 பேரும் என மொத்தம் 1323 போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் பணிக்கான எழுத்து தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

    இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று சேலம் வைஸ்யா கல்லூரியில் நடந்தது. தேர்வுக்கு வந்த போலீசார் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனும திக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களின் அடையாள அட்டை, மற்றும் ஹால்டிக்கெட்டும் தீவிர மாக கண்காணிக் கப்பட்டது. மேலும் தேர்வு அறையில் கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு இருந்தது.

    இதில் ஆண் போலீசார் 887 பேரும், பெண் போலீசார் 162 பேரும் என மொத்தம் 1049 போலீசார் தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஆண் போலீசார் 222 பேர், பெண் போலீசார் 52 பேர் உள்பட 274 தேர்வு எழுத வரவில்லை.

    இந்த தேர்வை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் கண்காணித்து பார்வையிட்டனர்.

    • மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கடந்த வாரம் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வஞ்ஜிரம் மீன் இன்று விலை குறைந்து ரூ.700க்கு விற்கப்பட்டு வருகிறது.

    சேலம்

    சேலத்தில் சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, வ.உ.சி.மார்க்கெட் பின்புறம் ஆகிய இடங்களில் மீன் மார்க்ெகட் இயங்கி வரு கிறது. இதுதவிர மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டு களில் தினமும் மற்ற இடங்களில் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சேலத்துக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, சென்னை, மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இருந்து கடல் மீன்களும், மேட்டூர் அணை மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்று மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் கார ணமாக மீன்களின் விலை யும் குறைந்து காணப்பட்டது.

    கடந்த வாரம் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வஞ்ஜிரம் மீன் இன்று விலை குறைந்து ரூ.700க்கு விற்கப்பட்டு வருகிறது. இதே போல் கடந்த வாரம் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வாவ்வல் இன்று ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் சங்கரா, கொடுவா, லோகு, கட்லா, மத்தி மீன்களின் விலையும் குறைந்து காணப்பட்டது.

    நெத்திலி மீன் கிலோ ரூ. 220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, கடந்த வாரத்தை விட மீன்களின் வரத்து அதிகரித்து இருப்ப தால் இன்று மீன்களின் விலை குறைந்து காணப்பட் டது. விலை குறைந்து காணப்பட்டாலும் விற்பனை மந்தமாகவே உள்ளது என்றனர்.

    • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.

    ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.

    மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலு சிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கிச் சென்றனர்.

    விடுமுைற தினத்தையொட்டி இன்று சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் அங்குள்ள கடைகளில் விற்பனை களை கட்டியது.

    • அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.
    • இன்று காலை நிலவரப்படி அணையில் 20.22 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகு திகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலையில் வினாடிக்கு 6 ஆயிரத்து 266 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 3 ஆயிரத்து 423 கன அடியாக சரிந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலையில் 54.42 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 53.70 அடியாக சரிந்தது.

    இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ் வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழு மையாக வெளியே தெரிகிறது.

    அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது. சில இடங்களில் வறண்டும், நிலப்பகுதி பாளம், பாளமாக வெடித்தும் காணப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையில் 20.22 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 14.70 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

    அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அதிகாரி சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    இந்த தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பிக்கும் வகையில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    19, 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்களுக்கு கையுந்துபந்து, 100 மீட்டர் ஓட்ட போட்டி நடக்கிறது. 45 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 1 மீட்டர் நடை பயணம், 50 மீ, 100 மீ ஓட்டம், கேரம் ஆகியவை நடக்கிறது.

    இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் போட்டி அன்று தங்கள் பெயர்களை பதிவு செய்து நேரடியாக கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
    • மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுல ாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    ஏற்காட்டில் குவிந்தனர்

    அதன்படி சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். குடும்பம், குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அளவில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.

    இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமையா ளர்கள் மற்றும் வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    உயிரியல் பூங்கா

    இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள குரங்குகள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள் பாம்புகள், முதலைகளையும் பார்வை யிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியி லும் குடும்பத்துடன் உற்சாக மாக ள குளித்து மகிழ்ந்தனர்.

    • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.
    • தற்கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவரது மனைவி நித்யா (23) இவர்களுக்கு சசிபிரியா (9) அஸ்விதாஸ்ரீ (8) மோகனா (5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நித்யா அரளி விதைகளை அரைத்து குளிர்பானத்தில் தனது 3 குழந்தைகளுக்கும் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதுபற்றி தெரியவந்ததும் 4 பேரையும் மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக நித்யா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
    • குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தூக்கணாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாதையன்குட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்பிரமணி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    தீவிர நடவடிக்கை

    இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தீவிரமாக கண்காணித்து சீல்வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படும் கடைகளை கண்காணித்து சமீபத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 13 கடை உரிமை யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் சேலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டியில் ஒரு மளிகை கடை, ஓமலூர் அருகே செலவடையில் ஒரு மளிகை கடை, எடப்பாடி, ஜலகண்ட ாபுரம் பிரதான சாலையில் ஒரு மளிகை மற்றும் ஒரு பீடா கடை, பெரியசோரகை மாட்டுக்காரன் வளைவில் 2 பெட்டிக்கடைகள், நங்கவள்ளியில் ஒரு பெட்டிக்கடை உள்பட 13 பெட்டி கடைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இன்றும், நாளையும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள தால் தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாைள மறுநாள் திங்கட் கிழமை முதல் இந்த 13 கடைகளும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரி பேட்டி

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் 33 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் புகையிலை விற்று கடை உரிமையாளர்கள் சிக்கினால் அந்த கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் 13 கடைகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்த தேர்வு இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
    • 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு 1 மணி வரை நடைபெற்றது. தேர்வெழுதியவர்கள் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்த தேர்வு இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் நடக்கிறது.

    10 மையங்கள்

    இதையொட்டி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் புறநகரில் 8 ஆயிரத்து 95 பேரும், மாநகரில் 3 ஆயிரத்து 89 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 184 பேர் எழுதுகிறார்கள்.

    ஜயராம் கல்லூரி, ஏ.வி.எஸ். கல்லூரி, கணேஷ் கல்லூரி, செந்தில் பப்ளிக் பள்ளி, பத்மாவதி கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, வைஸ்யா கல்லூரி, சோனா கல்லூரி, தியாகராஜர் பாலிடெக்னிக் உள்பட 10 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு 1 மணி வரை நடைபெற்றது. தேர்வெழுதியவர்கள் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டனர். மேலும் வீடியோ காமிரா பதிவும் செய்யப்பட்டனர்.

    கடும் கட்டுப்பாடு

    தேர்வு எழுத வந்த ஆண் மற்றம் பெண் விண்ணப்ப தாரர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனும திக்க வில்லை. தேர்வு எழுதுபவர்களுக்கு தேவை யான குடிநீர் மற்றும் கழி வறை உள்பட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    உதவி ஆய்வாளர் களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை யிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சிறப்பு குழுவினரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 3800 ஆண்கள், 1124 பெண்கள் என மொத்தம் 4924 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை எழுதினர்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.
    • இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் வீராணம் போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணி புரிந்தவர் கதிரேசன் வயது (52), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, வடக்கு துணை கமிஷனர் கவுதம் கோயலை விசாரிக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கை அளித்தார். இதையடுத்து கதிரேசனை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    சேலம்:

    சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

    திருச்செங்கோடு

    இதனை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜவேல், மல்லிகா, கார்த்திகேயன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், எட்டிமடை அ.தி.மு.க. நிர்வாகி குணசேகர், அசோக்குமார், சரவணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் லோகநாதன், செந்தில்குமார், முனியப்பன், குணவேல், சிறு மொளசி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர நிர்வாகி சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல்லில் ஸ்ரீதேவி மோகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தீவட்டிப்பட்டி

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், வேப்பிலை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், தீவட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமசாமி வெள்ளையன் என்கிற ராஜமாணிக்கம், ராஜகுரு, பீட்டர், ரஜாக், மணி, ராஜேஷ், நைனாகாடு ராஜா, பாபுலால், வேலு, நாராயணன் குலாப்ஜான், வேப்பிலை ரவி, காசி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி

    உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வாழப்பாடி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதில் நிர்வாகிகள் குபேந்திரன், சிவக்குமார், பத்மாவதிகுமரன், செல்லையா, பார்த்திபன், வெங்கடேசன், அனிதா பழனிமுத்து, பழனிசாமி, மதியழகன், ராஜா, சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×