என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem news: ganja"

    • ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
    • மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.

    அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த பிலாஸ்பூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டியில் சேலம் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதில் மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பைகளை கொண்டு வந்த சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சிவா (50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×