என் மலர்
ராமநாதபுரம்
- படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது.
- அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர்.
மண்டபம்:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜோசலன் என்பவருக்கு சொந்தமான படகில் 7 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் நள்ளிரவில் தனுஷ்கோடி அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் அவர்களது படகில் திடீரென்று பலகை உடைந்து விசைப்படகிற்குள் தண்ணீர் புகுந்தது. அதனை தற்காலிகமாக சரி செய்யும் முயற்சியில் படகில் இருந்த மீனவர்கள் மேற்கொண்டனர்.
ஆனாலும் அவர்களது முயற்சி வீணானது. தொடர்ந்து படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடலில் குதித்தனர்.
இதற்கிடையே அவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்டவைகளுடன் படகு முழுவதுமாக மூழ்கியது. இதனால் செய்வதறியாது தவித்த மீனவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து கடலில் பல மணி நேரம் நீந்தியவாறு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர். நடுக்கடலில் தத்தளித்த 7 பேரையும் தங்கள் படகில் ஏற்றி இன்று அதிகாலை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியது.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
- தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் பதட்டம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்த போதிலும் அதில் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளையும் விரட்டியடித்தனர்.
இது எங்கள் நாட்டு எல்லை, இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர்கள் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு அந்தோணி டிமக் (34),
மற்றும் சுதன் என்பவரது படகில் இருந்த அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) என மொத்தம் 14 மீனவர்களையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரணத்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகவும் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 70-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதிலும் கடந்த மாதம் 25-ந்தேதி ஒரே நாளில் 34 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 34 பேரில் 32 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர்களுக்கு பல லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கைது நடவடிக்கை சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதில் ஏராளமான படகுகள் இயக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளது. மேலும் அந்த படகுகளை தங்களது வாழ்வாதாரம் கருதி விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 29-ந்தேதி எல்லைதாண்டியதாக கைதான 4 மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகு, அதில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ். கருவி, எந்திரங்கள், நங்கூரம் உள்ளிட்ட உபகரணங்களை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்திற்கு இலங்கை அரசு நேற்று ஏலம் விட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.
- மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
- தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமறைவானார்.
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா குமிழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்திற்கு பட்டா பதிவு மாற்றம் செய்வதாக பகவதிமங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ரூ.37 ஆயிரம் தனக்கு லஞ்சமாக தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார். இதையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.37 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் கிராம நிர்வாக அலுவலர் கூறியதன் அடிப்படையில், ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள இ சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார்.
- இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிச. 24-ந்தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் வழக்கு இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார். மேலும் இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் 2 மீனவர்களின் வழக்கு விசாரணையை பிப்.12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- இன்று கடந்த 26-ந் தேதி கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர்.
- மீதமுள்ள 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 26-ந்தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் 34 பேரை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 2 முறை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக 15-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கடந்த 26-ந் தேதி கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 34 மீனவர்களில் 19 பேரை மட்டும் விடுதலை செய்தார். இதில் படகு உரிமையாளர்கள், 2 படகு ஓட்டுனர்கள் என 3 பேரும் இலங்கை பண மதிப்பில் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் விதிப்பதாகவும், தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மீதமுள்ள 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
விடுதலை செய்யப்படாத மீதமுள்ள 15 மீனவர்களின் படகு விபரங்களின் முரண்பாடு உள்ளதால் இந்த வழக்கை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
- ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.
- விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
அவர்கள் எல்லைதாண்டி வந்தாக கூறி சிறைபிடிப்பு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் 13 பேரை சிறைபிடித்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து 171 விசைப்படகுகளில் 1,200-க்கும் மேற்பட்ட மீனர்கள் மீன்துறை அலுவலக அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். அவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான தனுஷ்கோடி-தலை மன்னார் இடையே வலை களை விரித்து இருந்தனர்.
நள்ளிரவில் அந்த பகுதிக்கு ரோந்து பணி வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகு களை சுற்றிவளைத்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட பெரும்பாலான படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம் அவசரமாக வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் கடைசியாக தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினத்தை சேர்ந்த சந்தியா சதீஷ் (வயது 30) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல்பகு தியில் மீன்பிடித்ததாக கூறி, அந்த படகில் இருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரோன், காட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பயாஸ், சேசு, மண்டபம் காந்தி நகரைச் சேர்ந்த ரவி ஆகிய 10 பேரையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள தாழ்வுப்பாடு துறைமு கத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகி றார்கள்.
முன்னதாக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த நண்டு, இறால் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்களையும், அவர்களுக்கு சொந்தமான ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை யும் கைப்பற்றினர்.
கடந்த மாதம் ஒரே நாளில் ராமேசுவரம் மீன வர்கள் 34 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலை யில் மீண்டும் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்ப வம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
- ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி மற்றும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை அரசு ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து கடந்த 25-ந்தேதி ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறை மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள்.
- வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையில் நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ள கச்சத்தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவில் இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்கான முறையான அழைப்பிதழ் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரிடமிருந்து ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவு புனித திருப்பயண ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கச்சத்தீவு திருவிழா தொடர்பாக இலங்கையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை கொடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்வதற்காக வந்திருந்தனர்.
இதில் ராமேசுவரம் வேர்க்கோடு புனித ஜோசப் தேவாலய பங்குத்தந்தை அசோக்வினோ மற்றும் ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்ட குழுவினர் கலெக்டரை சந்தித்தனர். பின்னர் கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளரான வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தை அசோக்வினோ கூறியதாவது:-
வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடை பெற இருக்கிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 75 விசைப்படகுகள் மற்றும் 16 நாட்டு படகுகளில் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் செல்ல உள்ளனர்.
கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கு படகு கட்டணமாக ரூ.2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதல் கட்டணமாக யாரும், பணம் தரக்கூடாது.
ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து திருவிழாவில் பங்கேற்க வருபவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து தடையின்மை சான்று பெற்று வர வேண்டும்.
உரிய ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். வருகிற பிப்ரவரி 6-ந்தேதி முதல் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எங்களிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், பயணிகள் யாரும் சட்டவிரோ தமான பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. இது ஒரு திருப்பயணம் என்பதால் கடவுளை தரிசிப்பதற்காக மட்டுமே செல்கிறோம். விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் திருப்பயணியாகவே வரவேண்டும் என்றார்.
- அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
- பிப்ரவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய ரெயில்வே துறை முடிவு.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் நூற்றாண்டு பழைய ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்து 2022-ம் ஆண்டு பயணிகளுடன் பழைய ரெயில் பாலத்தில் ரெயிலை இயக்க அதன் நிர்வாகம் தடை விதித்தது.
மேலும் ஷெர்ஜர் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக வழுவி ழந்ததால் கடந்த 2022-ம் ஆண்டு பழைய ரெயில் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி யில் பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் ரெயில் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் காரணமாக ராமேசுரம் வரை செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாம்பன் கடலில் சுமார் ரூ.545 கோடி மதிப்பில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்டு செங்குத்து வடி வில் திறந்து மூடக்கூடிய வகையில் தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரட்டை வழித்தட மின்சார ரெயில் பாலத்திற்கான பணிகள் தூரிதப்படுத்தப்பட்டு கடந்தாண்டு இறுதியில் நிறைவு பெற்றது. பல்வேறு ஆய்வுப் பணிகளுக்கு பிறகு புதிய ரெயில் பாலம் தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்து பயணிகளுடன் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் புதிய ரெயில் பாலம் அனைத்து சோதனை ஓட்டங்களையும் கடந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
இந்த புதிய பாலத்தை பிப்ரவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி பாம்பன் புதிய ரெயில் திறப்பு விழா தைப்பூச தினமான வருகிற 11-ந்தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளாகவோ இருக்க வாய்ப்புள்ளது.
அன்றைய தினம் இந்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.
இதையொட்டி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து கப்பலில் சென்றவாறு, பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார்.
இதையடுத்து புதிய ரெயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விழாவை ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் வைத்து நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றார்.
அந்த வகையில் இன்று காலை 11.30 மணிக்கு சோதனையின் ஒரு கட்டமாக இந்திய கடலோர காவல் படை கப்பல் ஒன்று பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து அந்த வழியாக கடந்து சென்றது.
மேலும் முன்னேற்பாடு பணிகளில் ஒன்றாக இன்று அதிகாலையில் பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம் வரை பயணிகள் இன்றி என்ஜினுடன் 18 ரெயில் பெட்டிகள் இணைக் கப்பட்டு புதிய ரெயில் பாலத்தில் இயக்கப்பட்டது.
முன்னதாக நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட விரைவு ரெயில் இன்று அதிகாலை 5 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் மண்டபம் ரெயில் நிலையத்தில் இறங்கிவிடப்பட்டு பெட்டிகள் பூட்டப்பட்டு மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு பயணிகள் இன்றி 18 பெட்டகளுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
சுமார் 60 கி.மீ. வேகத்தில் புதிய ரெயில் பாலம் வழியாக சீறிப்பாய்ந்து 6.25 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரயில் பெட்டிகள் முழுமையாக சுத்தம் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மதியம் 1 மணிக்கு மேல் மீண்டும் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக மண்டபம் ரெயில் நிலையம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 18 பெட்டிகளுடன் பாம்பன், தங்கச்சிமடம் ஊருக்குள் ரெயில் சத்தம் கேட்டதால் மக்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- திறப்பு விழாவை மண்டபத்தில் நடத்துவதா அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய ரெயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் ரெயில் நிலையம் வரை தனியாக என்ஜின் ஒன்று இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சோதனை ஏற்பாடாக கடலோர காவல் படை கப்பல் ஒன்றை பாம்பன் தூக்குப்பாலத்தை திறந்து இன்று (வெள்ளிக்கிழமை) கடக்க வைக்கிறார்கள். அதன்பின்னர் மீண்டும் பாலத்தை மூடி ரெயிலை இயக்கி சோதனையும் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான 11-ந் தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இருக்க வாய்ப்புள்ளது. இந்த புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார்.
தொடர்ந்து கப்பலில் சென்றபடியே பழைய மற்றும் புதிய பாலங்களை பிரதமர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் புதிய ரெயில் பாலத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்து அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை மண்டபத்தில் நடத்துவதா அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.
ராமேசுவரம்:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் மூலம் சிவகங்கை மறை மாவட்ட பிஷப், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு பின்பு பங்குத்தந்தை அசோக் வினோ கூறியதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம். இந்த திருவிழாவுக்கு சென்று வர அரசிடம் அனுமதி பெற்றுத்தந்து, பயண ஏற்பாடுகள் செய்து தருவது தொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு 75 விசைப்படகுகளும், 16 நாட்டு படகுகளும் செல்ல உள்ளன. 2500-க்கும் மேற்பட்டோர் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அனைவரும் பூர்த்தி செய்து படகு உரிமையாளர்களிடம் அல்லது விழா கமிட்டியிடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
- பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமா வாசை, மஹாளாய அமா வாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது. மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறு கிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.

அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணற்பரப்பில் அமர்ந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையையொட்டி ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 740 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்தக் கடல், கோவில் பகுதிகளை சுற்றி
லும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிபெ ருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை திரிவேணி சங்கமம் பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்களுக்காக பலிகர்ம பூஜை மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஏராமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அங்கு தொடங்கி நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிகள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறைகள், கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்பு கார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரை யோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மதுரையில் வைகை கரை யோர பகுதிகள், சோழவந் தான் அருகேயுள்ள திருவே டகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந் துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.






