என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மண்டபம் மீனவர்களின் காவல் 28-ந் தேதி வரை நீட்டிப்பு
- மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 3-ந் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
- மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 3-ந் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும் காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 28-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Next Story






