என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shivaratri festival"
- இக்கோவிலில் கடவுள் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி இருக்கிறார்
- அந்த பெட்டிக்குள் எந்த பொருள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கனவில் வந்து முருகப் பெருமானே கட்டளையிடுவதாக கூறுகின்றனர்.
காங்கயம்:
காங்கயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உத்தரவு பெட்டி என்று ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்குள் எந்த பொருள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கனவில் வந்து முருகப் பெருமானே கட்டளையிடுவதாக கூறுகின்றனர்.
அந்த பொருள் சமுதாயத்தில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோவிலில் கடவுள் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி இருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இறுதியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கோவிலின் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.
அதே போல் இந்த வருடமும் வரும் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்களுக்கு தங்கத்தேரானது நிறுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன்மலை முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது
- 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூரில் ஈஷா யோக மையம் சார்பில் சிவராத்திரி விழா நடந்தது.வேலூர் ராணி மகாலில் நேற்று மாலை நடந்த சிவராத்திரி விழாவை ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஆப்கா இயக்குனர் சந்திரசேகரன் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு வந்த பொது மக்களுக்கு இலவசமாக ருத்ர தீட்சை வழங்கப்பட்டது.
இரவு முழுவதும் கோவை ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சிவலிங்கத்திற்கும், லிங்கபைரவிக்கும் பொதுமக்கள் மலர்களை சமர்பித்து வணங்கினர். இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஈஷா யோக மைய வேலூர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு, தன்னார்வலர்கள் மணிவண்ணன், சரவணன், சதீஷ், விஜயகுமார், குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்