என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rameswaram fishermen strike
நீங்கள் தேடியது "Rameswaram Fishermen strike"
ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் 4-வது நாளாக இன்றும் தொடருவதால் ரூ.5 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #RameswaramFishermen
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பதை தடுக்க பல்வேறு அதிரடி சட்டங்களை இலங்கை அரசு இயற்றி வருகிறது. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை நாட்டுடைமையாக்கியது.
இதை கண்டித்தும், நாட்டுடைமையாக்கப்பட்ட 3 படகுகள் மற்றும் ஏற்கனவே அங்கு பராமரிப்பின்றி உள்ள 168 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. வேலைநிறுத்தத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடி உபதொழில்களை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மீனவர்களின் போராட்டத்தால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்வரத்து இல்லாததால் ரூ.5 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை (7-ந் தேதி) பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். #RameswaramFishermen
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பதை தடுக்க பல்வேறு அதிரடி சட்டங்களை இலங்கை அரசு இயற்றி வருகிறது. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை நாட்டுடைமையாக்கியது.
இதை கண்டித்தும், நாட்டுடைமையாக்கப்பட்ட 3 படகுகள் மற்றும் ஏற்கனவே அங்கு பராமரிப்பின்றி உள்ள 168 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. வேலைநிறுத்தத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடி உபதொழில்களை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மீனவர்களின் போராட்டத்தால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்வரத்து இல்லாததால் ரூ.5 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை (7-ந் தேதி) பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். #RameswaramFishermen
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X