என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameswaram Fishermen strike"

    • ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
    • மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.

    ராமேசுவரம்:

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்தி வந்தனர்.

    இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    இதனிடையே, கடந்த 19-ந் தேதி மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயிலை மறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், கடந்த 12 நாட்களாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும் தமிழக முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.

    இதையடுத்து வழக்கம் போல் இன்று முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டாமல் மிகவும் பாதுகாப்புடன் மீன்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு.
    • சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சி மடத்தை சேர்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில் சென்றிருந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகிய மூவரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 3 மீனவர்களையும் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மூன்று பேரையும், அவர்களின் விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக ராமேசுவரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 24-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைபிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட அத்துமீறல்களை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. இருந்தபோதி லும் மீனவர்கள் பிரச்சி னைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு மட்டும் எட்டப்படவில்லை.

    கடந்த மாதம் 16-ந்தேதி ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இலங்கை அரசை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அதன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    இந்தநிலையில் கடந்த வாரம் 2 நாட்களில் ராமேசு வரம் மீனவர்கள் 42 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்ட அவர்கள் வவு னியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தரையில் படுக்க கூட இடமில்லாமல் மிகவும் குறுகிய அறைகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

    மேலும் சரியான தூக்கம், உணவின்றி தவித்து வருவதாக கிடைத்த தகவல்கள் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 24-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதன் காரணமாக ராமேசு வரம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகி றார்கள். தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் முடங்கியுள்ளது.

    போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கச்சிமடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    மீனவர்கள் பிரச்சி னைக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் நேற்று அழைத்திருந்தார். அதில் மீனவர் சங்க பிரதிநிதிகள் 5 பேர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசுகையில், உங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எனவே காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்த மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும், மத்திய மந்திரி நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.

    அத்துடன் 6 மாதம், ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன் பல லட்சம் அபராதம் விதிக்கப்படும் போது அவற்றை செலுத்த முடியாத மீனவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    எனவே இலங்கை கோர்ட்டு விதிக்கும் அபராத தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும், 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறினர்.

    இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை நாட்டுடைமை ஆக்குவது, ஏலத்தில் விட்டு படகுகளை உடைப்பது, அதில் இருக்கும் இரும்பு களை ஏற்றுமதி செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அதிகப்படியான அபதாரங்களை விதித்து இலங்கை அரசு தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவது, அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

    போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடைபெறும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ராமேசுவரம் வருகை தருகிறார். செம்மமடம் பகுதியில் தனியார் காப்பகத்தை புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    இதற்கிடையே மீன வர்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகி றது. அதனால் போராட்டம் நடைபெறும் இடத்தில் இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

    • மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.
    • ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், சிறைபிடிப்பை கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 24-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்.

    போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சி மடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழக மீனவர்களை கைது செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராதம் விதித்தும் அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

    மேலும் மத்திய மந்திரி நேரில் வந்து மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக போராட்ட பந்தல் முன்பாக கியாஸ் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு உணவு தயார் செய்யப்பட்டது.

    இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் சென்றிருந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மீனவர்களை திடீரென்று சந்தித்தார். அப்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கவர்னரிடம் வழங்கினார்.

    அப்போது அவர்களிடம் பேசிய கவர்ன மத்திய, மாநில அரசுகளிடம் பேசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துவிட்டு சென்றார்.

    காத்திருப்பு போராட்டத்தின் 4-வது நாளான இன்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்ட பந்தல் முன்பாக திருவோடுகள் கொண்டு வரப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் மீனவர்கள் அதனை கையில் ஏந்தி போராடினர்.

    இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் ஒருவர் கூறுகை யில், எங்கள் போராட்டத் திற்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நேரில் வந்த கவர்னரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றுள்ளார். இருந்தபோதிலும் மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.

    இல்லையென்றால் நாளை நாங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதனை எங்கே நடத்துவது என்பதை ரகசியமாக வைத்துள்ளோம். இந்த ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம் என்றார்.

    • மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
    • அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 24-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

    மீனவர்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 28-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.


    அதன்படி உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய மீனவர்கள் 4-வது நாளான நேற்று திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.

    மேலும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள். அந்த அபராத தொகையை செலுத்த நாங்கள் பிச்சை எடுக்கிறோம் என்றனர்.

    அத்துடன் இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் கோடியை அந்நியச் செலாவணியாக ஈட்டித்தரும் மீனவர்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நேற்று இரவு போராட்ட பந்தலுக்கு வருகை தந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனையை முன்னிறுத்தி தீர்வுகாண உத்தரவிட்டு இருப்பதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

    இருந்தபோதிலும் முதலமைச்சர், பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதன்படி இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.


    இந்தநிலையில் இன்று தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு பேராட்ட பந்தல் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

    நாளுக்கு நாள் தீவிர மடையும் போராட்டத்தால் ராமேசுவரத்தில் 700 விசைப்படகுகளும், மண்டபம் கோவில்வாடி பகுதியில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அத்துடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். 

    ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் 4-வது நாளாக இன்றும் தொடருவதால் ரூ.5 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பதை தடுக்க பல்வேறு அதிரடி சட்டங்களை இலங்கை அரசு இயற்றி வருகிறது. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை நாட்டுடைமையாக்கியது.

    இதை கண்டித்தும், நாட்டுடைமையாக்கப்பட்ட 3 படகுகள் மற்றும் ஏற்கனவே அங்கு பராமரிப்பின்றி உள்ள 168 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. வேலைநிறுத்தத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மீன்பிடி உபதொழில்களை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மீனவர்களின் போராட்டத்தால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்வரத்து இல்லாததால் ரூ.5 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை (7-ந் தேதி) பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். #RameswaramFishermen
    ×