என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே இன்று காலை 2 வாலிபர்கள் கழுத்தில் ரத்தக் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொது மக்கள் உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 வாலிபர்களின் கழுத்து பகுதி பிளேடால் அறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது.
ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கி நிலையில் கிடந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த வாலிபர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. அவர்களது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
புதுக்கோட்டை பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்த அவர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமா? அல்லது ஏதாவது பிரச்சினை காரணமாக மர்ம நபர்கள் அவர்களது கழுத்தை அறுத்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). ஆட்டோ டிரைவரான இவர் புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் விஜயகுமார் மீது புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது
இந்நிலையில் இரவு 1 மணிக்கு அவர் சவாரியை முடித்து விட்டு வீட்டிற்கு ஆட்டோவை ஓட்டி சென்றார். வீட்டின் அருகே செல்லும் போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென விஜயகுமாரை வழிமறித்து சரமாரி அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் எழுந்து வந்து பார்த்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இதனிடையே அரிவாள் வெட்டில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக் கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. முன்விரோதத்தில் எதி ராளிகள் யாராவது அவரை கொலை செய்தனரா? அல்லது ஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பட்ட ஏதாவது பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் அள்ள கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அனுமதியின்றி ஆற்று மணலை திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியா நிலை பகுதியில் தாசில்தார் ரவிச்சந்திரன் ரோந்து மற்றும் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டு வரப்பட்டது. அவற்றை மறித்து விசாரணை நடத்திய தாசில்தார் ரவிச்சந்திரன் 15 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.
பின்னர் அவை அறந்தாங்கி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாகவே அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மணல் திருட்டை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கந்தர்வக்கேட்டை அருகே நடுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 97 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளி ஆசிரியர் விமல் விஸ்வநாதன் (48) மாணவ, மாணவிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர் மன்னர்மன்னன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கை விட்டனர்.
அறந்தாங்கி:
கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் ஒக்கி புயல் காரணமாக ஏராளமான மீனவர்கள் பலியாகினர். இன்னும் பல மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் ஒக்கி புயல் காரணமாகவும், வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் கடந்த 28-ந்தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகினை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் இன்று 12-வது நாளாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
ஒக்கி புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் எந்தவித பாதிப்பும் கிடையாது. மேலும் புயல் சின்னம், காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டால் வழக்கமாக 2 அல்லது 3 நாட்கள் தான் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினரால் அனுமதி மறுக்கப்படும்.
ஆனால் தற்போது 8 நாட்கள் ஆகியும் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கடன் வாங்கி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மீன்பிடி தொழில் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஒக்கி புயலால் இறந்த குடும்பத்தினருக்கும், கடலுக்கு செல்லாத மீனவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 19). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குண மாகவில்லை.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காளியம்மாள் எந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. இருப்பினும் மர்ம காய்ச்சலுக்கு அவர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






