என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பொதுமக்கள் 10 ஆயிரம் மின்இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அனைத்து அரசு அலுவலகம், போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த கீழக்கரையிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மூலம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 50 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் 10 ஆயிரம் மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுந்து விடுவதால் மின்வினியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு குறைந்த அளவு மின்சாரம் வருவதால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின்சாதனங்கள், உபயோக பொருட்கள் பழுதடைந்து வருகிறது.இதனால் திருமருகல் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருமருகல் அரசு ஆஸ்பத்திரி, வேளாண்மை அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலகம்,போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே திருமருகல் பகுதிகளில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை புதிதாக மாற்றியமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது.
    • துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). இவரது மனைவி துர்கா தேவி (வயது 42). இவர்களது மகன் தினேஷ் (20) . இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கி விவசாய தொழிலை செய்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தியின் மனைவி துர்கா தேவி 18-ந்தேதி இரவு வீட்டில் இருந்து 8 மணிக்கு மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடன்தொகை கட்டி விட்டுவருவதாக சென்றுள்ளார். இரவு 11 மணி ஆகியும் தூர்காதேவி வீட்டுக்கு வராதால் கணவரும் அவரது மகனும் அக்கம்பக்கம் தேடி பார்த்து உள்ளனர்.

    எங்குதேடியும் கிடைக்காததால் காலையில் தேடிக் கொள்ளலாம் என இருவரும் தூங்கிவிட்டனர். பின்பு காலையில் எழுந்து தேடி பார்க்கும் பொழுது புஷ்பவனம் கடற்கரையில் ஒரு பெண் பிணம் படுகாயத்துடன் கிடப்பதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலை பார்த்த கணவன் சுந்தரமூர்த்தி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று போய் பார்த்தபோது இறந்தது துர்காதேவி தான் என தெரிய வந்தது. இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார்.

    வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பசுபதிமற்றும் போலீசார் புஷ்பவனம் கடற்கரைக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு நாகையிலிருந்து தடவியியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.

    நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்பு போலீசார் சம்பவம் நடைபெற்ற புஷ்பவனம் செம்போடை, தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று குழுவிற்கு பணம் கட்டி விட்டு வருவதாக கூறிச் சென்ற தூர்காதேவியை யாரேனும் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து கடற்கரையில் பிணத்தை வீசினார்களா? அல்லது தேத்தாகுடி தெற்கில் கொலை செய்து வாகனத்தில் வந்து புஷ்பவனம் கடற்கரையில் பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துர்கா தேவி வீட்டில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரம் அவரது செல்ஃபோன் வேலை செய்துள்ளது. பின்பு அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது என்பது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று காலை வேதாரண்யம் தென்னம்புலம் பெட்ரோல் பங்கு அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அழகுக்கண்டர் காட்டை சேர்ந்த சுந்தரவடிவேலுவின் மகன் அருண் (வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அருண் சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு மயக்கவியல் படித்து வருகிறார். இவர் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் விற்பனை செய்வதற்கு தனது வாட்ஸ்அப் மூலம் விளம்பரபடுத்தி இருந்தார். இதில் தூர்கா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளனர். இதில் அருண் பிறந்தநாள் அன்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்பொழுது அருண் தூர்கா தேவிக்கு 1 பவுன் நகை பரிசாக கொடுத்துள்ளார். இது போல் பலமுறை பணம் கொடுத்து தூர்கா தேவியுடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.

    இதே போல் சம்பவத்தன்று தூர்காதேவியை புஷ்பவனம் கடற்கரைக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். பின்பு துர்கா தேவி அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறி காரை எடுக்கும் பொழுது துர்கா தேவிக்கும் அருணுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் தங்களின் உறவை வெளியே சொல்லி விடுவேன் என துர்கா தேவி மிரட்டி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருண் மூன்று முறை காரை விட்டு துர்கா தேவியை மோதி உள்ளார். இதில்சம்பவ இடத்திலேயே துர்கா தேவி இறந்து விட்டார். பின்பு அருண் துர்கா தேவி பிணத்தை எடுத்து கடற்கரையில் போட்டு சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து அருணை போலீசார் கைது செய்து உள்ளனர். கள்ளக்காதலில் உல்லாசமாக இருந்து விட்டுஅதை வெளியில் சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதால் கொலை செய்த இச்சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உலகயோகா தினத்தை முன்னிட்டு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ேயாகாசனம் செய்தனர்.
    • வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    நாகப்பட்டினம்

    நாகை அருகே உதவி கலெக்டர் தலைமையில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் யோகா செய்து அசத்தினர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமை தாங்கி, யோகாசனம் செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் கூறியதாவது:-

    யோகா பயிற்சிகளை செய்ய வேண்டியும், அதன் பயன்களை அனைவரும் பெறவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    யோக பயிற்சிகளை செய்தால் உடல் நலன் மட்டுமின்றி, மன நலனும் மேம்படுகிறது. மனதை புத்துணர்ச்சி ஆக்குகிறது. எப்போதெல்லாம் யோக பயிற்சிகளை செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    மாணவ- மாணவிகளுக்கு ஒழுக்கம் என்பது முக்கியமானதாகும். சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தை கடைப்பிடித்தால், என்னை போன்று உயர் பதவிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆனந்த் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • 13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், மாணவர்கள் அங்குள்ள கலையரங்க மேடையிலும், மரத்தடியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். வகுப்பறை இல்லாமல் கடும் வெயிலில் மாணவர்கள் அவதிப்படுவது அண்மையில் சமூக வலை தளங்களில் வெளியானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கூறியதாவது,

    நாகையில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இதுவரை 6 பள்ளிகளுக்கு இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசின் பொது நிதியின் கீழ் 7 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    முட்டம் பள்ளியின் நிலையை ஏற்கெனவே நேரில் பார்வையிட்டு தெரிந்து கொண்டேன். 2023-24 ஆம் நிதி ஆண்டில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதியளித்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன.
    • பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான்.

    நாகப்பட்டினம்:

    நாகை தனியார் கல்லூரி மைதானத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் பா.ஜனதா அரசு கைது செய்யவில்லை.

    பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறு உருவமாக செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறறும்.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியது.
    • பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

    இந்த நிலையில் தர்காவில் நடைபெற்று வரும் மராமத்து பணிகள் குறித்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாகூர் ஆண்டவருக்கு மலர் போர்வை வழங்கி மலர் தூவி துவா செய்தார்.

    மேலும் தர்காவில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:-

    தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு என தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவி களை செய்து வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்ட ஹஜ் யாத்திரை தமிழக முதலமைச்சர் முயற்சியால் மீண்டும் தமிழகத்தில் இருந்து தற்போது தொடங்கப்ப ட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு விழாவிற்கு சந்தன மரக்கட்டைகள் தமிழக அரசு சார்பில் விலை இல்லாமல் வழங்கப்படுவதாகவும், இதே போல் ஏர்வாடி தர்காவிற்கும் விலை இல்லாமல் சந்தன கட்டைகள் வழங்க நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாகூர் ஆண்டவர் தர்கா வழிபாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய யானை வாங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய யானை வாங்க தமிழக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்தித்தனர்.
    • அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்நிகழ்வில் புருணை நாட்டில் இருந்து வந்த சுஜாதா, செகந்திரபாத்தில் இருந்து வந்த செந்தில் வடிவு மற்றும் கடலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் ஒன்று கூடி, அவர்கள் படித்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து கலந்துரையாடினர்.

    மேலும், அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்னர், குருகுலம் அறங்காவலர் வேதரத்தினத்துடன் குழுப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும், அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவிகளுக்கு குருகுலம் அறங்காவலர் வேதரத்தினம் புத்தகம் வழங்கினார்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நாகப்பட்டினம் தொகுதியில் புதிய கட்டடம் வேண்டுமென்று அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாகப்பட்டினம் தொகுதி திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கணபதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா என்று கேள்வி எழுப்பியி ருந்தேன். அதற்கு பதிலளித்த, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.

    அதன்படி, இரண்டே மாதங்களில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருக்கண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், திருப்பயத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் வேண்டுமென்று ஏற்கெனவே அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன். அதன்படி ஆழியூர் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும், பெரியக ண்ணமங்கலம் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறுகலான பாலத்தை கடந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
    • புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி மேலத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி பொதுமக்கள் அன்றாடம் திருமருகல், திட்டச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர மேலத்தெருவில் இருந்து முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறுகலான பாலத்தை கடந்து வாளாமங்கலம் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    அதேபோல் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவர்க ளும் பாலத்தை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தற்போது அதிக பயன்பாடு இல்லாமல் உள்ளது.

    இதனால் ஆட்டோ,கார் மற்றும் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வசதி இல்லாமல் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி வரும் நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி இப்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே கட்டுமாவடி ஊராட்சியையும் சீயாத்த மங்கை ஊராட்சியையும் இணைக்கும் வகையில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே குறுகலான பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி ஆற்றங்கரையில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு விவாதிக்கப்பட்டது.
    • ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் சீனிவாசன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் சீனிவாசன் கலந்து கொண்டு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீ னம், 2022-23ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்ப ணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெ டுப்பு அறிக்கை, மறு-கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரசாரம், தனிநபம் சுகாதாரம், ஒருமுறை பயன்ப டுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், ஜல்ஜீவன் திட்டம் - விடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி தீர்மானம்,சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மகளிர் சுயஉதவி குழுக்கள், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, குழந்தைக ளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி செயலர் மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமணச் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட எரவாஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி தேவி பாலதண்டாயுதம் தலைமை யிலும், அகரகொந்தகையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையிலும், கொட்டா ரக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி தலைமையிலும், ஏனங்கு டியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையிலும்,வடகரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையிலும், பில்லாளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ் தலைமையிலும், ராராந்திமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா தேவி தலைமையிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.

    • தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
    • மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் 85 சதவீதம் புத்தகங்கள் பள்ளி தொடங்கிய நாளிலேயே வழங்கப்பட்டு விட்டன. சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதால் 10 சதவீதம் கூடுதலாக தமிழ் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக மேடையில் பேசவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பெண்களின் வாழ்க்கைத்தரத்தை பொருளாதாரத்தில் உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் ஆகும். கல்விக்காக மிகப்பெரும் திட்டங்களை கலைஞர் கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு பள்ளி பாட புத்தகத்தில் 'செம்மொழி நாயகன் கலைஞர்' அல்லது 'தமிழகத்தின் சிற்பி கலைஞர்' என்ற புதிய பாடம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×