என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பர்றறலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட நிலையில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி காலை 9.15 மணிக்கு நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு நாகை அருகே பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    கவிதை, கட்டுரை (ம) பேச்சு போட்டிக்கு 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலகம் வழியாகவும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர் வழியாகவும் சுற்றறிக்கை அனுப்ப பெற்றுள்ளது.

    தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
    • தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டது.

    அதை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொறியாளர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் விட்டு சென்ற குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
    • அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் விட்டு சென்ற தண்ணீர் பாட்டில்கள், காகித தட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இதனை கண்ட மூத்த குடிமக்கள் பேரவை உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சித்திரவேலு (வயது 61) என்பவர் அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து, அப்ப குதி பக்தர்களான ஆறுகா ட்டுத்துறை உமா, கோயிலடி சாரதம், சின்னச்சாலை சாரதம் சோமு, காமாட்சி, முருகன், சிவகாமி உள்பட பலருடன் சேர்ந்து குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்தனர்.

    பின்னர், இந்த தூய்மை பணி குறித்து அறிந்த நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, சுகாதார கண்காணிப்பாளர் ராஜா, முருகேசன் மற்றும் தூய்மை பணியாளர்கள் டிராக்டர், லாரியுடன் வந்து குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்றினர்.

    கோவில் வளாகத்தை சுத்தம் செய்த ஆசிரியர் சித்திரவேலு மற்றும் குழுவினரை அப்பகுதி மக்களும், பக்தர்களும் வெகுவாய் பாராட்டினர்.

    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
    • பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் முடிந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார்.

    மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன்,புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூக பணியாளர் மதுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் கலந்துகொண்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி சென்றனர்.

    பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக திட்டச்சேரி பஸ் நிலையம் வழியாக பள்ளியில் முடிந்தது.

    பேரணியில் சுகாதார ஆய்வாளர் பரமநாதன்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் டென்னிசன், நற்குணம், உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், செந்தில், ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    • 6-வது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் கிராமத்தில் 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமை க்கப்பட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேகவிழா பந்தகால்முகூர்த்தம் பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், கோ பூஜையுன் பூர்ணாஹூதி தீபாராதனைகளுடன் ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது.

    6-வது கால யாக பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் மல்லாரி இசை முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.

    சிவாச்சாரியர்கள் கடங்களை சுமந்துவந்து வேதமந்திரங்கள் முழங்க மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து காத்தாயி அம்மன் பச்சையம்மன், மாரியம்மன், வீரன் பெரியாச்சி, உள்ளிட்ட பரிவார தெய்வங்குளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபராதனை நடைப்பெற்றது.

    • பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. வரை எந்தவித பொது சுகாதார கழிவறையும் இல்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு திருமருகல் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டார வேளாண்மை அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், வங்கி, கடைத்தெரு, இரத்தினகிரீஸ்வரர் கோவில் என நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் திருமருகல் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக எந்த வித பொது சுகாதார கழிவறையும் இல்லை.

    இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் சாலை மற்றும் பொது இடங்களில் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளை கழிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த ஏதுவாக பொது சுகாதார கழிவறை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
    • 2500 தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தொடங்கி வைத்தார்.

    வக்கீல் அருண் ஷோரி முன்னிலை வகித்தார்.

    முதல் கட்டமாக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என சுர்ஜித் சங்கர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபால், முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, வட்டார பொருளாளர் மணிஷ், பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர துணை தலைவர் கார்த்தி, நகர துணை செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் மகளிர் அணி மாலா, நகர செயலாளர்கள் சுரேஷ், ஹரி, சென்னை ராஜா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது கடலில் தவறி விழுந்துள்ளார்.
    • 20 மணி நேரத்திற்கு பிறகு மாயமான மாணவனின் உடல் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், காமே ஸ்வரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ஞானசேகர் (வயது 20) இவர் நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று தனது தாத்தா கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப் படகில் தனது தந்தை சந்திரசேகரனுடன் மீன்பிடிக்க அதிகாலை கடலுக்கு சென்றுள்ளனர்.

    மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் பொறியியல் படித்து வரும் ஞானசேகர், கடல் அலையின் வேகத்தால் தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

    தகவல் அறிந்த வேளாங்க ண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கீழையூர் கடலோர காவல் குழும போலீசாருடன் மீன்வர்களும் படகு மூலம் மாயமான இளைஞரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மாணவன் கிடைக்காததால் மீண்டும் இன்று அதிகாலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படகுகளின் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் கடற்க ரையோரம் நண்டு கள் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் உயிரிழந்த நிலையில் மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

    சுமார் 20 மணி நேரம் தேடலுக்கு பிறகு கடலில் மாயமான மாணவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாளில் தனது தாத்தாவின் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.

    தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் வெங்கடேச குருக்கள் தலைமையில் சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர், சிங்கப்பூர் தொழிலாளர் சபா பவுர்ணமி குழுயாக பூஜை தலைவர் துரை அரசன், தொழிலதிபர்கள்சிங்கப்பூர் சபாரெத்தினம், தோப்புத்துறை ஆரிபா, இந்து நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், வீரராசு கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம்முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம், இந்து நற்பணி மன்றத்தினர், தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
    • பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து, நேற்று இரவு அஸ்த்ரா யாகம் நடைபெற்று.

    பின், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு மஞ்சள், தாலி கயிறு, குங்குமம், வளையல், 50-க்கும் மேற்பட்ட பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பின், பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    வேளாங்கண்ணி பழைய காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கடைத்தெரு, பேராலயம் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    அப்போது மது மற்றும் போதை பொருட்களால் எற்படும் தீமைகளை குறித்தும் குடிக்கும், போதைக்கும், யாரும் அடிமையாகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மாணவர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள், என 300, க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கடற்கரை அருகே உள்ள பூங்கா வரை சென்றனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேதாராண்யம்:

    வேதாராண்யம் உபகோட்டத்திற்க்கு உட்பட்ட வேதாரண்யம் 110 கே.வி துணை மின் நிலையம், வாய்மேடு 110 கே.வி துணை மின் நிலையம், ஆயக்காரன்புலம் 33 கே.வி துணை மின் நிலையம், வேட்டைகாரன் இருப்பு 33 கே.வி. துணை மின் நிலையம் ஆகிய நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்பு த்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பாவனம் தொண்டியக்காடு, தாணி க்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்சநதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடி நெல்வயல், கத்தரிப்புலம், செட்டிபுலம், நாகக்கு டையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியா ப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ள ப்பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    ×