search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
    X

    பக்தர்கள் எடுத்து வந்த சீர்வரிசை பொருட்கள்.

    அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

    • 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
    • பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து, நேற்று இரவு அஸ்த்ரா யாகம் நடைபெற்று.

    பின், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு மஞ்சள், தாலி கயிறு, குங்குமம், வளையல், 50-க்கும் மேற்பட்ட பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பின், பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×