search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள்
    X

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள்

    • ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பர்றறலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட நிலையில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி காலை 9.15 மணிக்கு நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு நாகை அருகே பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    கவிதை, கட்டுரை (ம) பேச்சு போட்டிக்கு 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலகம் வழியாகவும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர் வழியாகவும் சுற்றறிக்கை அனுப்ப பெற்றுள்ளது.

    தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×