search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தகாத உறவை வெளியில் சொல்வதாக மிரட்டியதால் காரை ஏற்றி பெண் கொலை- மருத்துவ மாணவர் கைது
    X

    தகாத உறவை வெளியில் சொல்வதாக மிரட்டியதால் காரை ஏற்றி பெண் கொலை- மருத்துவ மாணவர் கைது

    • நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது.
    • துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). இவரது மனைவி துர்கா தேவி (வயது 42). இவர்களது மகன் தினேஷ் (20) . இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கி விவசாய தொழிலை செய்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தியின் மனைவி துர்கா தேவி 18-ந்தேதி இரவு வீட்டில் இருந்து 8 மணிக்கு மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடன்தொகை கட்டி விட்டுவருவதாக சென்றுள்ளார். இரவு 11 மணி ஆகியும் தூர்காதேவி வீட்டுக்கு வராதால் கணவரும் அவரது மகனும் அக்கம்பக்கம் தேடி பார்த்து உள்ளனர்.

    எங்குதேடியும் கிடைக்காததால் காலையில் தேடிக் கொள்ளலாம் என இருவரும் தூங்கிவிட்டனர். பின்பு காலையில் எழுந்து தேடி பார்க்கும் பொழுது புஷ்பவனம் கடற்கரையில் ஒரு பெண் பிணம் படுகாயத்துடன் கிடப்பதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலை பார்த்த கணவன் சுந்தரமூர்த்தி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று போய் பார்த்தபோது இறந்தது துர்காதேவி தான் என தெரிய வந்தது. இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார்.

    வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பசுபதிமற்றும் போலீசார் புஷ்பவனம் கடற்கரைக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு நாகையிலிருந்து தடவியியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.

    நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்பு போலீசார் சம்பவம் நடைபெற்ற புஷ்பவனம் செம்போடை, தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று குழுவிற்கு பணம் கட்டி விட்டு வருவதாக கூறிச் சென்ற தூர்காதேவியை யாரேனும் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து கடற்கரையில் பிணத்தை வீசினார்களா? அல்லது தேத்தாகுடி தெற்கில் கொலை செய்து வாகனத்தில் வந்து புஷ்பவனம் கடற்கரையில் பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துர்கா தேவி வீட்டில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரம் அவரது செல்ஃபோன் வேலை செய்துள்ளது. பின்பு அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது என்பது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று காலை வேதாரண்யம் தென்னம்புலம் பெட்ரோல் பங்கு அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அழகுக்கண்டர் காட்டை சேர்ந்த சுந்தரவடிவேலுவின் மகன் அருண் (வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அருண் சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு மயக்கவியல் படித்து வருகிறார். இவர் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் விற்பனை செய்வதற்கு தனது வாட்ஸ்அப் மூலம் விளம்பரபடுத்தி இருந்தார். இதில் தூர்கா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளனர். இதில் அருண் பிறந்தநாள் அன்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்பொழுது அருண் தூர்கா தேவிக்கு 1 பவுன் நகை பரிசாக கொடுத்துள்ளார். இது போல் பலமுறை பணம் கொடுத்து தூர்கா தேவியுடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.

    இதே போல் சம்பவத்தன்று தூர்காதேவியை புஷ்பவனம் கடற்கரைக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். பின்பு துர்கா தேவி அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறி காரை எடுக்கும் பொழுது துர்கா தேவிக்கும் அருணுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் தங்களின் உறவை வெளியே சொல்லி விடுவேன் என துர்கா தேவி மிரட்டி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருண் மூன்று முறை காரை விட்டு துர்கா தேவியை மோதி உள்ளார். இதில்சம்பவ இடத்திலேயே துர்கா தேவி இறந்து விட்டார். பின்பு அருண் துர்கா தேவி பிணத்தை எடுத்து கடற்கரையில் போட்டு சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து அருணை போலீசார் கைது செய்து உள்ளனர். கள்ளக்காதலில் உல்லாசமாக இருந்து விட்டுஅதை வெளியில் சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதால் கொலை செய்த இச்சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×