என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி, மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இன்று கடலில் கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படுவதால் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பத்திரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது55). இவர் மரம் வெட்டி உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரது வயலில் உள்ள பனை மரத்தை வெட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென அதே பனைமரம் அன்பழகன் மீது விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அன்பழகன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:
கீழ்வேளூர் அருகே ஆந்தகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகையன் ராணி தம்பதியினர்.இவர்களுடைய மகன் அருண் பாண்டி (வயது 22), பெயிண்டர்.
அலிவலம் பகுதியை சேர்ந்த செல்வம் மகள் கார் குலஸ்தேவி (21) காதல் திருமணம் செய்து கொண்டார்.
அடிக்கடி இருவருக்கு தகராறு ஏற்பட்டதால் கார் குலஸ்தேவி அவருடைய தகப்பனார் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன் சென்றுவிட்டார்.
அதனால் மனமுடைந்த அருண்பாண்டி வீட்டில் விஷம் குடித்தார்.அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கீவளூர் போலீசில் ராணி வயது (50) புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் அருகே திருப்பூண்டி பப்புசெட்டி தெருவை சேர்ந்த பாப்பையன் மகள் மாரியம்மாள் (வயது 20). இவர் நாகையில் உள்ள பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் மூன்றாம் ஆண்டு பட்டம் படிப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு செல்கிறேன் என கூறி வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன் பின் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாய் சின்ன பொண்ணு கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் என் மகள் மாரியம்மாளை அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (22) என்பவர் கடத்தி சென்றுவிட்டார். அவரிடமிருந்து என் மகளை மீட்டு தாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






