search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

    நாகை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பப்ளிக் ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் ஆண் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது54), ரவி (44) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×