என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல் சீற்றம்
    X
    கடல் சீற்றம்

    கடல் சீற்றம்- வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி, மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இன்று கடலில் கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படுவதால் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பத்திரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×