என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
கீழையூர் அருகே இளம்பெண் கடத்தல்?
கீழையூர் அருகே கல்லூரிக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் அருகே திருப்பூண்டி பப்புசெட்டி தெருவை சேர்ந்த பாப்பையன் மகள் மாரியம்மாள் (வயது 20). இவர் நாகையில் உள்ள பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் மூன்றாம் ஆண்டு பட்டம் படிப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு செல்கிறேன் என கூறி வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன் பின் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாய் சின்ன பொண்ணு கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் என் மகள் மாரியம்மாளை அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (22) என்பவர் கடத்தி சென்றுவிட்டார். அவரிடமிருந்து என் மகளை மீட்டு தாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






