என் மலர்
நாகப்பட்டினம்
- சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
- மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது .இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.
அதேபோல் சம்பா,தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன்,இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- வருகிற 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
- கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் செந்தில்குமார், நீலமேகம், சிவன ருட்செல்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை பணியா ளர்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலி பாட்டில்கள் சேகரிக்க நிர்பந்திக்க கூடாது. காலி பாட்டில்களை சேகரிக்க நிர்பந்திக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து வரும் 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பறவைகள் சரணாலயத்தில் 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
- ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலாபறவைகள் வந்துகுவிந்துள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க கோடியக்கரைக்கு 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமாக மழை பெய்த நிலையில் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருவதால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்துகுவிந்துள்ளது.
ரஷ்யா, ஈராக் நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை.
சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம்.உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளது.
பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் பிளம்மிங்கோ (பூநாரை,) பறவைகள் வந்து குவிந்துள்ளன இதற்கு காரணம் அதற்கு ஏற்ற உணவான பிளாங்டன் லார்வா அதிக அளவில் இந்த சரணயத்தில் கிடைக்கின்றன. மேலும் பறவைகள் வரத்து ஏற்ற சூழல் நிலவுவதால் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன வழக்கத்துக்கு மாறாக இலங்கையில் இருந்து பூநாரை சிறு குஞ்சுகளும் வந்துள்ளன.
பறவைகளின் நூழைவாயிலாக கருதப்படும் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யபட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.
- 9 துறைமுகங்களில் 2-k; எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
மத்திய மேற்கு வங்கக் கடலில், விசாகப்பட்டனத்திற்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.
எனவே, தொலை தூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது 9 துறைமுகங்களில் தற்போது இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது.
- வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சி இன்றளவும் காணப்படுகிறது. இந்த காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதிகளில் சென்று தேர்நிலையை அடைந்தது. இதை தொடர்ந்து இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
நாகப்பட்டினம்:
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பலபகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் பகுதிகளை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்க வைக்க ஏதுவாக, மாவட்டத்தில் மண்டல அளவிலான குழுக்கள், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்படும் மக்களை மீட்டு தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
இதில் ஒரு முகாமில் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் மக்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு துணையாக 5000 முதல்நிலை பொறுப்பாளர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் 300 தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 206 மரம் அறுக்கும் இயந்திரம், 4,300 மணல் மூட்டைகள், 40,000 சாக்கு பைகள், 2,115 சவுக்கு மரங்கள், 59 நீர் இறைக்கும் இயந்திரம், 24 நீர் உறிஞ்சும் இயந்திரம், 163 லைப்பாய், 142 லைப் ஜாக்கெட் மற்றும் தேவையான மீட்பு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாத்துறை சார்பில் மருந்து பொருட்கள் மற்றும் இதர வசதிகள் தயார்நிலையில் உள்ளது.
மின் பகிர்மான கழகம் சார்பில் 4,500 மின் கம்பம், 100 மின்மாற்றிகள், 120கி.மீ. மின் கம்பிகள் போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக 16,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல குறுவை நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் நிவாரண கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.
- நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
நாகப்பட்டினம்:
தெற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர்.
இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரணியம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வா தாரம் பாதித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மீன் வரத்து இல்லாததால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
- கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
- 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவைத்தேடி பேருந்துநிலையம் வடக்கு புறம் அருகே உள்ள ஆறுமுகம் என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த கோழிக்கடையில் சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத போது கடையின் பூட்டை உடைத்து கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே சென்று அங்குள்ள கல்லாப்பெட்டியை எடுக்க முயன்றுள்ளார்.
இதை வீட்டில் இருந்த படி கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்களை கடையில் போய் பார்க்க கூறியுள்ளார்.
அவர்கள் வந்து பார்த்தபோது வடமாநில இளைஞர் ஒருவர் கோழிக்கடையில் உள்ளே நின்றது தெரிய வந்தது.
உடனே பொதுமக்கள் அவரை பிடித்து அருகில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்து, கீழையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவருடன் 5 பேர் வந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.
- டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்காரம் செய்தார் முருகன் என கந்தபுராணம் கூறுகிறது.
அதன்படி வரலாற்று சிறப்புமிக்க இவ்வாலயத்தின் கந்த சஷ்டி விழா 13-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி, நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதை ஈடு செய்யும் வகையில், டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
- தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
- காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாகை ஒன்றியம் பாலையூர் பகுதியில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ நேரடி ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி, விற்குடி, வடகரை, கீழப்பூதனூர் ஆகிய பகுதிகளிலும் வயல்களில் இறங்கி பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
மழை பாதிப்புகள் குறித்து ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது, ஏற்கெனவே, காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
வறட்சி என்றாலும் வெள்ளம் என்றாலும் அதிக பாதிப்பை சந்திக்கும் நாகையின் மீது அரசு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன், இளஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கொடியரசிக்கும் அதே பகுதியை 2 பேருக்கும் முன்விரோதம் இருந்தது.
- இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
நாகப்பட்டினம்;-
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்.
இவரது மனைவி கொடியரசி (வயது 28).
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (23), ரஞ்சித் (22) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தமும், ரஞ்சித்தும் சேர்ந்து கொடியரசி வீட்டின் அருகே சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த கொடியரசியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கொடியரசி வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடர் மழை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற நிலையில் வெள்ள அபாயத்திலிருந்து பொது மக்களை காப்பாற்ற நாகை மாவட்ட காவல்துறையின் சார்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஅறிவுறுத்தலின்படி மீட்பு பணிகள் மேற்கொள்ள காவல்துறையினரைக் கொண்டு பேரிடர் மீட்புக் குழு அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா என நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.
அவசர உதவிக்கு உங்கள் நாகை போலீஸ் சூப்பிரண்ட்யிடம் பேசுங்கள் என 84281 03090 என்ற எண்ணையும் வெளியிட்டார்.






