search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் சூழ்ந்த வயல்களில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    பாதிக்கப்பட்ட பயிர்களை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    மழைநீர் சூழ்ந்த வயல்களில் எம்.எல்.ஏ. ஆய்வு

    • சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
    • மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது .இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    அதேபோல் சம்பா,தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன்,இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×