search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northern Youth"

    • கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
    • 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவைத்தேடி பேருந்துநிலையம் வடக்கு புறம் அருகே உள்ள ஆறுமுகம் என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த கோழிக்கடையில் சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத போது கடையின் பூட்டை உடைத்து கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே சென்று அங்குள்ள கல்லாப்பெட்டியை எடுக்க முயன்றுள்ளார்.

    இதை வீட்டில் இருந்த படி கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்களை கடையில் போய் பார்க்க கூறியுள்ளார்.

    அவர்கள் வந்து பார்த்தபோது வடமாநில இளைஞர் ஒருவர் கோழிக்கடையில் உள்ளே நின்றது தெரிய வந்தது.

    உடனே பொதுமக்கள் அவரை பிடித்து அருகில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்து, கீழையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவருடன் 5 பேர் வந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.
    • போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் பிரபுதரன். தொழிலதிபரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கையுறை, முககவசம் உள்ளிட்ட மருத்துவ கவச உடைகளை சர்வதேச தரச்சான்றுடன் கொடுப்பதற்கு ஆர்டர் எடுத்தார். பின்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பனியன் வர்த்தகரான சினேகாஷிஸ் முகர்ஜி (வயது 36) என்பவர் மூலமாக அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து சினேகாஷிஸ் முகர்ஜி, சம்பந்தப்பட்ட ஆடைகளை பிரபுதரனுக்கு அனுப்பி வைத்தார். கடந்த 2019 முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் இதற்காக ரூ.4 கோடியே 10 லட்சத்தை பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜிக்கு அனுப்பிவைத்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கையுறை, முக்கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகள் உரிய தரத்தில் இல்லை என்றும், அவை போலியான சான்றிதழ் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தினர் பிரபுதரனுக்கு ஆடைகளை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பிரபுதரன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சினேகாஷிஸ் முகர்ஜி, அவரது மனைவி, தந்தை உள்பட 4 பேர் மீது மோசடி வழக் குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக் டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தா சென்று முகாமிட்டு, மோசடி சம்பவம் தொடர்பாக சினேகா ஷிஸ் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளராக இருப்பவர் திருநாவுக்கரசு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 22ந் தேதி தனது மனைவியுடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 170 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது.

    இதே போல் அருகில் வசிக்கும் உதவி பொது மேலாளர் செந்தில் (42) என்பவர் வீட்டில் ரூ.10 ஆயிரம், பாஸ்கர் வீட்டில் ரூ.40 ஆயிரம் பணம் திருடு போனது.

    அதற்கு அடுத்து வசிக்கும் வேல்முருகன் என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்த போது அங்கு எதுவும் கிடைக்காததால் விட்டுச் சென்றனர்.

    இது குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. துர்காதேவி வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிராஜா, சரத்குமார் அடங்கிய தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டது.

    தனியார் சிமெண்ட் ஆலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியில் இருப்பதால் அவர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அரியலூர் உள்ளிட்ட சிமெண்ட் கம்பெனிகள் உள்ள இடங்களில் இதேபோல் அதிக அளவு நகை பணம் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    முக்கிய கைரேகைகளை வைத்து ஆய்வு செய்ததில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர் இதில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் விரைந்தனர்.

    அங்குள்ள தார் மாவட்டம் பசோலி பகுதியில் அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போது அதே பகுதியை சேர்ந்த பாயாமெர்சின் பாப்ரியா (30) என்பவரிடம் இருந்த நகையை பரிசோதனை செய்தனர். அந்த நகையை கொள்ளைபோன உரிமையாளரிடம் செல்போன் மூலம் காட்டியதில் அது தனது நகை என உறுதி செய்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் கொள்ளைக்கு மூளையாக இருந்த நபர் பல்வேறு இடங்களில் நகைகளை கொடுத்து வைத்திருப்பதும், அதில் ஒரு பவுன் மட்டும் தனக்கு கிடைத்ததும் தெரிய வந்துள்ளது.

    அதன்பேரில் அந்த வாலிபரை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சித்ராதேவிக்கும் பவன்யாதவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பீகாரை சேர்ந்தவர் பவன் யாதவ் (வயது 27). இவர் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகர் பி.எம்.காம்ப்ளக்ஸ் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திரதாரி (50) என்பவர் அவரது மனைவி சித்ராதேவி(43)யுடன் திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள மற்றொரு பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். ஒரே பகுதியில் இருவரும் வசித்து வந்ததால் பவன்யாதவுக்கும், உபேந்திரதாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து பவன்யாதவ், உபேந்திரதாரி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது உபேந்திரதாரி மனைவி சித்ராதேவிக்கும் பவன்யாதவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

    இதையறிந்த உபேந்திரதாரி அதிர்ச்சியடைந்ததுடன், பவன்யாதவ்வை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து சித்ராதேவியுடன் பேசி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்றிரவு பவன்யாதவ் வீட்டிற்கு சென்ற உபேந்திரதாரி, எனது மனைவியுடனான தொடர்பை விட்டு விடு என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உபேந்திரதாரி, தான் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவ்வை சரமாரி வெட்டினார். இதில் அவரது தலை, முழங்கை, வலது மணிக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் பவன்யாதவ் சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்து உபேந்திரதாரி தப்பி சென்றுவிட்டார்.

    பவன்யாதவ்வின் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், பவன்யாதவ்வை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவன்யாதவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பவன் யாதவ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் வடமாநில தொழிலாளியை டிரைவர் வெட்டிக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி சட்டையை கிழித்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர்.
    • ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்ட வடமாநில இளைஞர்கள் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    கரூர்:

    தமிழகத்தின் தொழில் நகரமாக திகழும் கரூர் மாவட்டத்தில் பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரித்தல், ஆயத்த ஆடைகள் உற்பத்தி என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

    இதற்கிடையே கரூர் அருகேயுள்ள புலியூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறித்த தகவல் தெரிவிக்கும் டைம் கேன்வாசராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவில் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தின் இருக்கையில் இடம் பிடித்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த வட மாநில இளைஞர்கள் நீங்கள் இடம் பிடித்த இடத்தில் நாங்கள்தான் அமருவோம் என்று கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றியதால் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய செல்வராஜ் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளார்.

    அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி சட்டையை கிழித்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர். இதைப்பார்த்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை துரத்தி பிடித்தனர்.

    அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வடமாநில இளைஞர்களை அடித்துள்ளனர். அப்போது ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்ட வடமாநில இளைஞர்கள் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் காயம் அடைந்த செல்வராஜ் கூறுகையில், தனது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்ற வட மாநிலத்தவர்கள், தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் கழட்ட முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    கரூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நடந்த அந்த நிகழ்வு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • ஈரோடு ரெயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    வடமாநி லங்களில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில்ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்ற னர்.

    இதையடுத்து ஈரோடுரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் வெளி மாநில ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடுரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ஈரோடுரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது எஸ்.5 பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும்.

    அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்காளம், கோல்பாரா பகுதியை சேர்ந்த பவதுல்லா (23) என தெரிய வந்தது. அவர் அந்த கஞ்சாவை கேரளாவிற்கு விற்க சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பவதுல்லாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர்.
    • போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு அந்தப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாசம் மற்றும் போலீசார் காபி கடை பஸ் நிறுத்தம் அருகே சென்று சோதனை செய்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் குட்கா விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை கண்காணித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றார். இதனை கண்ட போலீசார் அதிரடியாக குடோனுக்குள் புகுந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் குடோனை சோதனை செய்தபோது ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 750 கிலோ 75 கிராம் குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த குட்கா மற்றும் பணம் ரூ. 39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மடக்கிப் பிடித்த 2 வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் (வயது 24) மற்றும் கோபால் குமார் (24) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியது ஜெகதீஷ் பட்டேல் மற்றும் பரத் பட்டேல் என்பதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம் மற்றும் கோபால்குமாரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ஜெகதீஸ் பட்டேல், பரத் பட்டேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இதேபோன்று சூலூரில் 50 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்ற சூலூரை சேர்ந்த முத்துபாண்டி (41), ஷியாம் சுந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வட மாநில வாலிபர் கொலை பரபரப்பு தகவல்
    • 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    கோவை,

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் முசாப்பூர் மாலிக் ( வயது 24). இவர் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில்3-வது மாடியில் வசித்து வந்தார்.

    இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த மான்வா என்கற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார். 2 பேரும் துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கோவையில் வசித்து வந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் மாத சம்ப ளத்திற்கு வேலைசெய்து வந்தனர்.

    கடந்த 11 மாதமாக நசிபுல் சேட், முசாப்பூர் மாலிக்கிற்கு சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் நசிபுல் சேட், அவரது மகன் அனிஷேக் (19) ஆகியோர் முசாப்பூர் மாலிக் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    அங்கே இருந்த அவரிடம் நாங்கள் சம்ப ளம் நாங்கள் தரும்போது வாங்கிக் கொள்ளவும். ஏதாவது பிரச்சினை செய்தால் நடப்பதே வேறு. எங்களை எதிர்த்து வாழ முடியாது. எங்கே போனாலும் உனக்குபணம் கிடைக்காது என மிரட்டியுள்ளனர்.அதற்கு முசாப்பூர் மாலிக், "சம்பளம் கொடுத்தே தீர வேண்டும். நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். என்னை ஏமாற்ற நினைத்தால் விடமாட்டேன் என கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நசிபுல் சேட்டும்அவரது மகன் அனிஷேக்கும் சேர்ந்து முசாப்பூர் மாலிக்கை தாக்கினர். பின்னர் தலையை சுவற்றில் மோதி அடித்தனர். தொடர்ந்து அவர்கள் வாளி தண்ணீரில் தலையை அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்தனர்.

    அப்போது அந்த அறையில் ஆனந்தகுமார் இருந்தார். தடுக்க வந்த அவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் பயந்துபோன ஆனந்தகுமார் எதுவும் செய்யவில்லை. இங்கே இருந்தால் கொலை செய்ததை சொல்லி விடுவார் என நினைத்து அவரை கட்டாயப்ப டுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் நடந்த பின்னர் மேற்கு வங்கம் சென்ற ஆனந்தகுமார் திரும்ப வரவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அழுகிய நிலையில் முசாப்பூர் மாலிக் உடல் கைப்பற்றப்பட்டது.

    இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீ சார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை திரும்பி வந்த ஆனந்தகுமார் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி கொலை வழக்குப்பதிவு செய்து ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நசிபுல் சேட், அனிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை ஜே.எம் எண் 1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தி அனுமதி அளித்தார். நேற்று முன்தினம் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    "முசாப்பூர் மாலிக் எங்களது உறவினர். அவருக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தோம். ஆனால் அவர் சம்பள பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தார். மிரட்டினால் போய் விடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக பேசி மிரட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விசாரணை முடிந்ததும் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 2 பேரையும் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    ×