search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 750 கிலோ குட்கா பதுக்கி விற்ற வடமாநில வாலிபர்கள் கைது
    X

    கோவையில் 750 கிலோ குட்கா பதுக்கி விற்ற வடமாநில வாலிபர்கள் கைது

    • வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர்.
    • போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு அந்தப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாசம் மற்றும் போலீசார் காபி கடை பஸ் நிறுத்தம் அருகே சென்று சோதனை செய்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் குட்கா விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை கண்காணித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றார். இதனை கண்ட போலீசார் அதிரடியாக குடோனுக்குள் புகுந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் குடோனை சோதனை செய்தபோது ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 750 கிலோ 75 கிராம் குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த குட்கா மற்றும் பணம் ரூ. 39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மடக்கிப் பிடித்த 2 வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் (வயது 24) மற்றும் கோபால் குமார் (24) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியது ஜெகதீஷ் பட்டேல் மற்றும் பரத் பட்டேல் என்பதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம் மற்றும் கோபால்குமாரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ஜெகதீஸ் பட்டேல், பரத் பட்டேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இதேபோன்று சூலூரில் 50 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்ற சூலூரை சேர்ந்த முத்துபாண்டி (41), ஷியாம் சுந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×