search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில் ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடந்தது.

    நாகையில் ஆலோசனை கூட்டம்

    • வருகிற 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
    • கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் செந்தில்குமார், நீலமேகம், சிவன ருட்செல்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை பணியா ளர்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலி பாட்டில்கள் சேகரிக்க நிர்பந்திக்க கூடாது. காலி பாட்டில்களை சேகரிக்க நிர்பந்திக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து வரும் 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×