search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice cultivation"

    • தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    நாகை ஒன்றியம் பாலையூர் பகுதியில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ நேரடி ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி, விற்குடி, வடகரை, கீழப்பூதனூர் ஆகிய பகுதிகளிலும் வயல்களில் இறங்கி பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

    மழை பாதிப்புகள் குறித்து ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது, ஏற்கெனவே, காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    வறட்சி என்றாலும் வெள்ளம் என்றாலும் அதிக பாதிப்பை சந்திக்கும் நாகையின் மீது அரசு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன், இளஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
    • விதை நெல் ரூ.8.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை, கீழ்பவானி மற்றும் மேட்டூர் வலது கரை பாசனங்களுக்கு இங்கிருந்து தான் தாய் விதை நெல் தரப்படுகிறது.

    விவசாயிகள் அதை பயிரிட்டு விதை நெல்லாக உற்பத்தி செய்து மீண்டும் சங்கத்துக்கே வழங்குகின்றனர். அவர் பெறப்படும் விதை நெல்லில் முளைப்பு திறன் 80 சதவீதம், ஈரப்பதம் 13, புரத்தூய்மை 99, பிற ரக கலப்படம் 0.2 சதவீதம் இருந்தால் மட்டுமே விற்ப னைக்கு உகந்ததாக விதை சான்று அலுவலர் மூலம் சான்று அளிக்கப்படுகிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனங்களுக்கு கடந்த ஏப்ரல் 21-ந் தேதி திறக்கப்பட்ட நீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    அதனால் இந்த சங்கத்தின் மூலம் ஐ.ஆர்.20 ரக விதைநெல் 37 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தம் 10 டன் ரூ.3.70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

    அதேபோல் பி பி டி (5204) ரக விதை நெல் கிலோ 40 ரூபாய் விலையில் மொத்தம் ஏழரை டன் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை யானது. தவிர பவானி ரக விதை நெல் கிலோ 42 ரூபாய் விலையில், நாலுடன் மொத்தம் 1.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

    அதனால் முதல் போகத்தில் மட்டும் சங்கத்தின் மூலம் 21 டன் விதை நெல் ரூ.8.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

    • பி12 - நெல் விழாவில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
    • வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்களான அருண்பாரதி, ஆசிஷ்குமார், லிங்கேஸ்வரன், தேவா, மகிழ் அமுதன் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மேல்மங்கலம் பகுதியில் பெரியகுளம் வட்டார வேளாண்மை துறையினரால் நடைபெற்ற "பி12 - நெல் விழா"வில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் இலை வண்ண அட்டவணை கொண்டு நைட்ரஜன் பரிசோதிக்கும் முறை, இயற்கை முறையில் நெல் விதைநேர்த்தி செய்யும்முறை மற்றும் குருத்து பூச்சியை தடுக்கும் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர்.

    இதில் பாட ஆசிரியர்கள் டாக்டர் கண்ணபிரான், விஜயகுமார், வட்டார வேளாண் இணை இயக்குனர், காமாட்சிபுரம் சென்டகட் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×