என் மலர்
நாகப்பட்டினம்
- பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது.
- சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக அந்த இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது இங்கு சுரங்கபாதை அமைக்க முடியாது என ரெயில்வே நிர்வாகம் மறுத்த விட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரெயில்வே கேட் வழியை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லுதல், பிணம் கொண்டு செல்லுதல் மற்றும் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தினர். தற்போது சுரங்கபாதை அமைக்காமல் ெரயில்வே பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றது. இதனை அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக வேதா ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், துணை போலீஸ் சூப்பி ரண்டு முருகவேல் ஆகியோர் அப்பகுதி மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்பி மாநில நிதியில் இருந்து சுரங்கபாதை கட்ட முயற்சி எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்ததால் மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது.
- பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி தன்னாட்சி - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சான்றிதழ் வெளியீட்டு விழாவில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செந்தில்குமார் மற்றும் இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி குழுமத்தின் ஆலோசகர் பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமத்தில் இணை செயலர் தரவரிசை பட்டியல் நகலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரியின் தேர்வு துறை நெறியாளர் சின்னதுரை தேசிய தர மதிப்பீடு பட்டியல் பற்றி விளக்க உரை வழங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் தேசிய தரவரிசை பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்ட குமரன் மற்றும் ஊடகம் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
- கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கேட்டறிந்து 31 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நாகை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கீதா, நகர இன்ஸ்பெக்டர்கள் சரவணன், தியாகராஜன், சிவராமன், ஆனந்தராஜ், பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அகல ரெயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.
- நாகை ெரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை - வேளாங்கண்ணி இடையே சுமார் 10 கி.மீட்டர் நீளம் கொண்ட அகல ரயில் பாதை, கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இப்பாதை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மண் இறுகும் தன்மையற்றதாக இருந்ததால், இத்தடத்தில் 30 கி.மீட்டர் வேகத்துக்குள் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால், 10 கி.மீட்டர் தொலைவைக் கடக்க சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியது.
இந்நிலையில், இந்தப்பாதையின் தரத்தை மேம்படுத்தி, ரெயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பது ரயில் பயன்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியும், அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைப்பெற்று வந்தது.இந்த நிலையில், இத்தடத்திலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூலம் இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான 50 பேர் கொண்ட குழு நாகை ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியிலிருந்து அதிவேக ரயிலை இயக்கி வேக சோதனை மேற்கொள்ளும் வகையில் 110 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் வேக சோதனை ரயில் அடுத்த 15 நிமிடங்களில் நாகையை வந்தடைந்தது.
- காப்பு கட்டி பூச்சொரிதலுடன் தொடங்கி துர்க்கை அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
- சொர்ணகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலை அடுத்த பொரவச்சேரியில் பழமை வாய்ந்த சொர்ணகாளி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில்ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையில் ஆண்டு பெரு விழா நடைபெறுவதுவழக்கம். அதன்படி இந்த ஆண்டு க்கான பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
காளி போன்று வேடமிட்ட பக்தர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் இசைத்தபடி முன்னே செல்ல அதற்கு ஏற்ப காளி நடனமிடம் திருநடன காட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து காளி அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் தத்ரூபமாக நடைபெற்றது. முன்னதாக சொர்ணகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- வன்முறையாக வெடித்து பள்ளிவாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது.
- மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்கு–லத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் பள்ளி–யில் விடுதியில் தங்கி படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க கோரியும், பள்ளியை இழுத்து மூட வலியுறுத்தியு ம்தொடர்ச்சியாக 4 நாட்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை அமைதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும்எடுக்காததால் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்து பள்ளிவாகன ங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது. காவல், தீயணைப்பு வாகனங்களும் தாக்கப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு பிறகும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் ஆறுதலோ, இழப்பீட்டு உதவி தொகையோ, வழங்காதது கண்டிக்கத்தக்கது.இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் வன்மு றையை தவிர்த்து இருக்க முடியும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுத்து தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப் படுவதாக கூறப்படுகிறது. எனவே, போராடிய இளை ஞர்கள், மாணவர்களின் எதிர்காலம்பாதிக்க ப்படாமல் இருக்க, ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது போல இதையும் நீக்க வேண்டும் என்று முக்குலத்துப்புலிகள் கட்சி–யின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வாரகாலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்ற வேண்டும்.
- வருவாய் ஈட்டாத பெற்றோரின் குழந்தைகளுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேருராட்சியில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக கொண்டாட மாணவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கடிதம் எழுதி அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த கடிதத்தில், மத்திய அரசின் முடிவு படி நாடு முழுவதும் 11.8.2022 முதல் 17.8.2022 முடிய ஒரு வார காலம் சுதந்திர வாரமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம் தேசியக் கொடி நம் உயிரில், உணர்வில் கலந்த பெருமை என்று குறிப்பிட்டு வீடு தோறும் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வார காலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்றக் வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப் பட உள்ளது. பெற்றோர் மூலம் வாங்கி கொள்ளலாம். பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் வருவாய்ஈட்டாத பெற்றோரின் குழந்தை களுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து வீடுகளிலிலும் தேசியக் கொடி என்னும் இலக்கை எட்ட மாணவர்கள் பங்களிப்பால் மட்டுமே இயலும்.
அஞ்சல் துறைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு அஞ்சல் கடிதம் எழுதி வருகிறேன். மாணவர்களுக்கு தேச பற்ற ஊக்குவிக்கும் விதமாக சுமார் 5000 ஆயிரம் கடிதம் எழுதி அனுப்ப உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகிறது.
- ‘தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
- நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.
நாகப்பட்டினம்:
தனித்தமிழ் இயக்கத் தந்தை பன்மொழி அறிஞர் மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா, மறை.தாயுமானவன் எழுதிய 'தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்' நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, மறைமலை அடிகள் பிறந்த நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன். அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். விழாவில், பெரும்புலவர் பதுமனார், முனைவர் மறைமலை இலக்குவனார், மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண் உழவர்நலத்துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- அண்டகாத்துறை, செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா பிரந்தியங்கரை ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளான் உழவர்நலதுறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 2022-23 இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் அனிஷ் தலைமை வகித்தார். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வில்வநாதன் வரவேற்றார்.
வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சதாசிவம், மூலக்கரை பிராந்தி–யங்கரை, வேதாரணியபுரம், அண்டகாத்துறை , செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கினார் .நிகழ்ச்சியில்க ரியாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட தி.மு.க விவசாய அணி ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன் , உதவிவேளாண்மை அலுவலர் ராஜசேகர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால், அவை தலைவர் ஏகாம்பரம், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாsளர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்மேரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மோகன் மாவட்ட பிரதிநிதி செல்வம், கிளை செயலாளர்கள் அருள் ,உதயசூரியன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.
- பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்வேதார ண்யம் அடுத்த பஞ்சநதி க்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவ -மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து நிதி சேர்த்து ரூ.25000 செலவு செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.இதை அறிந்த இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியை நேசித்து தூய்மை பணி மேற்கொண்ட மாணவ ர்களுக்கும் பொற்றோ ர்களுக்கும் விருந்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் முரளி தரனை அணுகி அனுமதி பெற்று 500 நபர்களுக்கு பள்ளி வளாகத்தில்ஆறு சுவை உணவு விருந்து அளித்தனர்.பள்ளியில் முன்னாள் மாணவர்கள்தங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன், ஒய்வு பெற்ற இந்திய ராணுவ விரார் தமிழரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் ,மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- மேற்கூரை, ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
- குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வெளி ப்பாளையம் அருகே காடம்பாடியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2010-11 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்ட இக்கட்டிடம் தரமாக கட்டப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் இக்கட்டிடம் மேற்கூரை மற்றும் ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இங்கு 5 வயதுக்குட்பட்ட 37 குழந்தைகள்படித்து வருகின்றனர். குழந்தை களின் பாதுகாப்பு கேள்வி க்குறியாகி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசும் உடனடி யாக நடவடிக்கை எடுத்து விபத்து நடக்கும் முன்பாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
- வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை தொடர்ந்து குடிநீர் சீராக இருக்கும் என்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது .வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை பக்கிரிசாமி வரவேற்றார்.கூட்டத்தில், கோடி யக்காடு, கோ டியக்கரை கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகி விட்டதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரை மட்டுமே பொதுமக்களுக்கு பயன்படுகிறது .
கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில்பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகி ன்றனர். எனவே கொள்ளி டம் கூட்டுக் குடிநீரை தொடர்ந்து சீராக வழங்க வேண்டும், கழிவறை, சாலை வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத் தலைவர் அறிவழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேதாரத்தினம், ராஜசேகர், தனபால் ,நடராஜன், கண்ணகி, ராசி கண்ணு, மாலதி, துரைராஜ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பேசினர்.இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்க ரன் கூறும்போது, வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன . அதன் பிறகு குடிநீர் சீராக இருக்கும் என்றார்.
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன்மற்றும் சுகாதாரத்துறை, வேளா ண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கே ற்று பேசினர்.போக்குவரத்து நெருக்கடி யாக உள்ள ஆயக்காரன்புலம் கடைத்தெரு, அய்யனார் கோயில் அருகில் வேகத்தடை அமைக்கப்படும் என உதவி செயற் பொறியாளர் மதன்குமார் கூறினார். முடிவில் மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.






