என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீஸ் பாதுகாப்புடன் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி
- பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது.
- சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக அந்த இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது இங்கு சுரங்கபாதை அமைக்க முடியாது என ரெயில்வே நிர்வாகம் மறுத்த விட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரெயில்வே கேட் வழியை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லுதல், பிணம் கொண்டு செல்லுதல் மற்றும் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தினர். தற்போது சுரங்கபாதை அமைக்காமல் ெரயில்வே பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றது. இதனை அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக வேதா ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், துணை போலீஸ் சூப்பி ரண்டு முருகவேல் ஆகியோர் அப்பகுதி மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்பி மாநில நிதியில் இருந்து சுரங்கபாதை கட்ட முயற்சி எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்ததால் மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்